.

Pages

Wednesday, March 18, 2015

அதிரை கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை தீவிரம் ! [ படங்கள் இணைப்பு ]

கடலோரப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தமிழகத்தில் 'ஆபரேஷன் ஆம்லா' என்ற கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று காலையில் துவங்கியது.

தமிழக கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் 6 மாதங்களுக்கு ஒரு முறை காவல்துறையினர் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இந்த ஒத்திகையில் தீவிரவாதிகள் போன்று, கடல் வழியாகவோ அல்லது சாலை வழியாகவோ ஊடுருவி வரும் போலீஸாரை கடற்கரையோரம் பாதுகாப்பில் இருக்கும் போலீஸார் பிடிப்பார்கள். இதுவே 'ஆபரேஷன் ஆம்லா' என்று அழைக்கப்படுகிறது.

அதிரை கடலோரப்பகுதிகளில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தர்மராஜன் தலைமையில், பட்டுக்கோட்டை காவல்துறை உதவி கண்காணிப்பாளர் டாக்டர் தீபாகணிக்கர், பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்பு குழுமம் டி.எஸ்.பி. பீட்டர் அகஸ்தியன் ஆகியோரின் மேற்பார்வையில், அதிரை காவல்துறை ஆய்வாளர் ஆனந்த தாண்டவம், கடலோர பாதுகாப்பு குழுமம் ஆய்வாளர் சுபாஷ் சந்திரபோஸ் கடலோரப் பாதுகாப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், அதிரை காவல்துறை உதவி ஆய்வாளர் பசுபதி உள்ளிட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர்.

கடலோர காவல்துறையினர் மற்றும் இந்திய கடற்படையினர் தனித்தனியாக படகுகளில் சென்று மீனவர்களிடம் அடையாள அட்டை மற்றும் படகு பதிவு புத்தகங்கள் உள்ளதா, சந்தேகத்திற்கிடமான வகையில் படகுகள் செல்கிறதா என சோதனையிட்டனர். கிழக்கு கடற்கரைச் சாலைகளில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்பு ஒத்திகை பணிகள் நாளை மாலை வரை நீடிக்கும்.
 

 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.