.

Pages

Saturday, March 28, 2015

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் சாதனை நிகழ்த்திய மாணவர்கள்-ஆசிரியர்கள் கெளரவிப்பு !

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் 66 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி இன்று மாலை 4.30 மணியளவில் பள்ளியின் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் தலைமை வகித்த காதிர் முகைதீன் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஏ. ஜலால் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார். காதிர் முகைதீன் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் உதுமான் மொய்தீன் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார். ஆண்டறிக்கையை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஏ. மஹபூப் அலி வாசித்தார் அதில் பள்ளியின் சார்பில் கல்வியில் விளையாட்டில் மாணவர்கள் - ஆசிரியர்கள் நிகழ்த்திய பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டார். மேலும் பள்ளி ஆற்றிவரும் சமூக பணிகளையும், பள்ளியின் சார்பில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும் குறிப்பிட்டு பேசினார்.

முன்னதாக பள்ளியின் தமிழ்துறை ஆசிரியர் அஜீமுதீன் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு பேச்சாளராக நமதூரை சேர்ந்த பிரபல தொலைக்காட்சி மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் அண்ணா சிங்கார வேலு சிந்தனை தரும் நகைச்சுவை சிறப்பு சொற்பொழிவை நிகழ்த்தி அனைவரையும் அசத்தினார். நிகழ்சிகள் அனைத்தையும் தமிழ்துறை ஆசிரியர் உமர் பாரூக் இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார். 

பள்ளியின் சார்பில் நடப்பாண்டில் கல்வி - விளையாட்டில் சாதனை நிகழ்த்திய ஆசிரிய ஆசிரியைகள், மாணவர்கள், அலுவலக ஊழியர்கள் ஆகியோருக்கு நிகழ்ச்சிக்கு தலைமை மற்றும் முன்னிலை வகித்த காதிர் முகைதீன் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஏ. ஜலால், துணை முதல்வர் முனைவர் உதுமான் மொய்தீன் ஆகியோரால் சிறப்பு பரிசுகள், பொன்னாடைகள் போர்த்தி கெளரவிக்கப்பட்டது.

இவ்விழாவில் ஊர் முக்கியஸ்தர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள், முன்னாள் ஆசிரியர்கள் - மாணவர்கள், பெற்றோர்கள், பள்ளி மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

3 comments:

  1. பரிந்துரை:
    அடுத்த ஆண்டின் 67-வது ஆண்டு விழாவை ஒரு புதுமையாக, முன்னாள் மாணவர்களான 'எழுத்தறிஞர்' இப்ராஹீம் அன்சாரி அவர்களையும், 'நாவலர்' நூர் முஹம்மது போன்றோரையும் கொண்டு, விழா நடத்தலாமே?

    ReplyDelete
  2. தன் முகம் மறந்தாலும் S.சன்முகம் (தமிழ் ஆசான்) முகம் மறக்க மாட்டான் உங்கள் மாணவன்.
    நன்றி அதிரை newsஇக்கு எங்கள் ஆசான்கள் புகைபடத்திற்கு.

    ReplyDelete
  3. அதிக பதக்கங்களை வென்று, சாதனை படைத்த மாணவர்களை வாழ்த்துகிறேன். மொழித் திறன் போட்டி மற்றும் அறிவியல் படைப்பு கண்காட்சிப் போட்டி பள்ளியில் நடத்த வேண்டும்; மாணவர்களின் அறிவுத் திறனை வெளிஉலகுக்கு கொண்டுவருவதன் மூலம் மனித சமுதாயத்திற்கு தேவையான படைப்புகள் அவர்களால் உருவாக்க முடியும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.