.

Pages

Saturday, March 21, 2015

அதிரை அருகே உலக சிட்டு குருவிகள் பாதுகாப்பு தினவிழா !

ஜே.சி.ஐ. பட்டுக்கோட்டை விங்ஸ் சார்பில் உலக சிட்டு குருவிகள் பாதுகாப்பு தினவிழா மார்ச் 20ம் தேதி அன்று ராஜாமடம் கீழத்தோட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.

நிகழ்ச்சி பள்ளித் தலைமை ஆசிரியர் அனந்தநாயகி தலைமை நடைபெற்றது. சிட்டுக்குருவிகள் பாதுகாப்பு தின விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை ஜே.சி.ஐ பட்டுக்கோட்டை விங்ஸ் தலைவர் கே.வெங்கடேஷ் வெளியிட்டார்.

சிட்டுக்குருவிகள் பற்றி பறவையில் ஆர்வலர் ஆர். வி. விவேகானந்தன் பேசும் போது சிட்டுக்குருவிகள் மனிதர்களுடன் இணைந்து வாழ்பவை. நம் வாழ்விடங்களை சுற்றியுள்ள புழு பூச்சிகளையும் தானியங்களையும் உண்டு வாழ்பவை. சிட்டுக்குருவிகள் வாழ தக்க சுழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுப்பதால் நல்வாழ்வு கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. வீடுகளில் பறவை ஆர்வலர்கள் கூடுகள் வைத்தும் தான்யங்கள் குடிநீர் வைத்தும் பாதுகாத்து வந்தார்கள். நவீன வீடுகள் வரும்வரை சிட்டுக்குருவிகள் வீடுகளுக்குள்ளேயும் கூடுகள் அமைத்து குஞ்சு பொறித்து வாழ்ந்து வந்தன. தற்காலத்தில் பாதுகாப்பு மற்றும் கொசுக்கள் புகா வண்ணம் கதவு சன்னல்களை மூடி வைப்பதால் சிட்டுக்குருவிகள் கூடு கட்ட வீடுகளில் இடம் கிடைப்பதில்லை. தான்யங்களில் உரம் பூச்சி மருந்துகளின் நச்சுத்தன்மை சேர்ந்து விடுவதால் இவற்றை உணவாக உட்கொள்ளும் பறவைகளின் முட்டை ஓடுகள் கடினத் தன்னை இழந்து விடுவதால் இனப்பெருக்கம் பாதிக்கப்படுகிறது. போதிய தற்காலத்தில் அளவு உணவும் கிடைப்பதில்லை.சிட்டு குருவிகள் வளர்ப்பதற்காகவும் மருந்துப் பொருட்களுக்காகவும் வேட்டையாடப்பட்டு வருகின்றன. இதனால் நம்மோடு குடும்பத்தோடு குடும்பமாக வாழ்ந்த சிட்டுக்குருவிகள் நம் தலைமுறை காலத்திலேயே அழிந்து வருகிறது. இந்த சிட்டுக்குருவிகளை பாதுகாப்பதற்காக உலகம் முழுவதும் மார்ச் 20ந் தேதியை உலக சிட்டுக்குருவிகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. நமது வீடுகளின் தாழ் வாரங்கள் வீட்டினுள்ளும் கூடுகள் அமைத்துக்கொடுப்பது தானியங்கள் வைப்பது குடிக்க குளிக்க தட்டுகளில் நீர் வைப்பது போன்றவற்றை செய்தால் சிட்டுக்குருவிகளை மீட்டு எடுக்கலாம்.

பள்ளிகளில் தோறும் மாணவர்களிடையே இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. உலகம் வாழ வேளாண்மை சிறக்க சிட்டுக்குருவிகளை பாதுகாக்கவேண்டும் என்றார்.

ஜே.சி.ஐ பட்டுக்கோட்டை விங்ஸ் பொருளாளர் ஜெ. வினோத் நன்றி கூறினார்.
 
 
 

1 comment:

  1. கடந்த காலங்களில் வீடுகளில் ராகி, கோதுமை, சாமை போன்ற சிறு தானியங்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றை வெயிலில் உலர்த்தி, காய வைப்பது வழக்கம். வீணாக சிந்தும் தானியங்களை உண்ண சிட்டுக் குருவிகள் வரும். ஓடுகளால் வேயப்பட்ட வீடு, கட்டட கூரைகளில் கூடுகட்டி வாழ்ந்து வந்தன. தற்போது சிறு தானிய உற்பத்தி, பயன்பாடு குறைந்து விட்டது. ஓட்டு வீடுகள், கான்கிரீட் வீடுகளாக மாறிவிட்டன; இதனால், சிட்டுக்குருவிகளுக்கு கூடு கட்ட இடம் இல்லை.

    மண் பானை, மூங்கில் குழாய், அட்டைப் பெட்டி, 'பிளைவுட்' என, பல தரப்பட்ட பொருட்களில் கூண்டு தயாரித்து வாழ்வு இடமளிக்கலாம்.

    மொபைல்போன் டவர் அலை வரிசை அதிர்வு காரணமாக, சிட்டுக்குருவிகள் அழிந்து வருவதாக கூறப்படுகிறது, இதை மறுத்தாலும் ஆதரித்தாலும் மொபைல் இல்லாமல் ஒரு நாள் போகுவது மனிதனுக்கு கஷ்டமே.

    சிட்டுக் குருவி லேகியம் இருக்கா? சாப்பிட்டவர்கள் சொல்லுங்களேன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.