அதிரை அடுத்துள்ள பேராவூரணி அருகே சொர்ணக்காடு கிராமத்தில் புள்ளிமான் ஒன்று பிடிபட்டது. அதனை வனத்துறையினர் கோடியக்கரை காட்டில் விடுவதற்காக பெற்றுச் சென்றனர்.
பேராவூரணியை அடுத்த சொர்ணக்காடு கிராமத்தில் தெரு நாய்களால் விரட்டப்பட்டு, வெருண்டோடிய புள்ளிமானை கிராமத்து இளைஞர்கள் பிடித்து வைத்துக்கொண்டு, கிராம உதவியாளர் மூலம் பேராவூரணி வட்டாட்சியருக்கு தகவல் அளித்தனர்.
தகவலறிந்து வந்த பேராவூரணி வட்டாட்சியர் ராஜசேகரன், சரக வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியம், வருவாய் துறை அலுவலக உதவியாளர் சுப்பிரமணியன் ஆகியோர் நள்ளிரவில் சொர்ணக்காடு கிராமத்திற்கு சென்றனர். இதுகுறித்து வட்டாட்சியர் மாவட்ட வனஅலுவலர் சவுந்தர்ராஜனுக்கு தகவல் அளித்தார்.மாவட்ட வன அலுவலர் ஆலோசனையின் பேரில் வனச்சரக அலுவலர் சங்கரலிங்கம் அறிவுரையின் படி, வனவர் ரவிக்குமார் உத்தரவின் பேரில் வனக்காப்பாளர்கள் ராமச்சந்திரன், என்.கணபதி செல்வம் ஆகியோர் சொர்ணக்காடு கிராமத்தில் பிடிபட்ட மானை கோடியக்கரை காப்புக்காட்டில் விடுவதற்காக பெற்று சென்றனர்.
சுமார் மூன்று வயது மதிக்கத்தக்க, பதினைந்து கிலோ எடையுள்ள இந்த ஆண் புள்ளிமான் ஆரோக்கியத்துடன் இருந்தது. நாய்கள் துரத்தியதால் ஓடும்போது, முட்களில் கீறியதால் இடது கொம்பு அருகிலும், தொடையிலும் சிறிய காயம் இருந்தது. இப்பகுதியில் சுமார் நாற்பது, ஐம்பது கிலோமீட்டர் தூரத்தில் மான்கள் வசிக்கும் வனப்பகுதி ஏதும் இல்லாத நிலையில், இப்பகுதிக்கு மான் எப்படி வந்தது என புதிராக உள்ளது. அண்மையில் பேராவூரணி பகுதியில் செருவாவிடுதியிலும், கட்டுமாவடியிலும் மான் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது பிடிபட்ட மான் கோடியக்கரை காட்டில் விடப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து வன அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' ஜகுபர் அலி, பேராவூரணி
பேராவூரணியை அடுத்த சொர்ணக்காடு கிராமத்தில் தெரு நாய்களால் விரட்டப்பட்டு, வெருண்டோடிய புள்ளிமானை கிராமத்து இளைஞர்கள் பிடித்து வைத்துக்கொண்டு, கிராம உதவியாளர் மூலம் பேராவூரணி வட்டாட்சியருக்கு தகவல் அளித்தனர்.
தகவலறிந்து வந்த பேராவூரணி வட்டாட்சியர் ராஜசேகரன், சரக வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியம், வருவாய் துறை அலுவலக உதவியாளர் சுப்பிரமணியன் ஆகியோர் நள்ளிரவில் சொர்ணக்காடு கிராமத்திற்கு சென்றனர். இதுகுறித்து வட்டாட்சியர் மாவட்ட வனஅலுவலர் சவுந்தர்ராஜனுக்கு தகவல் அளித்தார்.மாவட்ட வன அலுவலர் ஆலோசனையின் பேரில் வனச்சரக அலுவலர் சங்கரலிங்கம் அறிவுரையின் படி, வனவர் ரவிக்குமார் உத்தரவின் பேரில் வனக்காப்பாளர்கள் ராமச்சந்திரன், என்.கணபதி செல்வம் ஆகியோர் சொர்ணக்காடு கிராமத்தில் பிடிபட்ட மானை கோடியக்கரை காப்புக்காட்டில் விடுவதற்காக பெற்று சென்றனர்.
சுமார் மூன்று வயது மதிக்கத்தக்க, பதினைந்து கிலோ எடையுள்ள இந்த ஆண் புள்ளிமான் ஆரோக்கியத்துடன் இருந்தது. நாய்கள் துரத்தியதால் ஓடும்போது, முட்களில் கீறியதால் இடது கொம்பு அருகிலும், தொடையிலும் சிறிய காயம் இருந்தது. இப்பகுதியில் சுமார் நாற்பது, ஐம்பது கிலோமீட்டர் தூரத்தில் மான்கள் வசிக்கும் வனப்பகுதி ஏதும் இல்லாத நிலையில், இப்பகுதிக்கு மான் எப்படி வந்தது என புதிராக உள்ளது. அண்மையில் பேராவூரணி பகுதியில் செருவாவிடுதியிலும், கட்டுமாவடியிலும் மான் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது பிடிபட்ட மான் கோடியக்கரை காட்டில் விடப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து வன அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' ஜகுபர் அலி, பேராவூரணி
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.