.

Pages

Monday, March 30, 2015

காணாமல் போன அதிரை பெண் திண்டிவனம் அருகே கொலை !

அதிரை அருகே உள்ள கரிசைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சித்திரவேலு. இவரது மனைவி கலைச்செல்வி ( வயது 30 ) . கடந்த 18 ந் தேதி முதல் தனது மனைவியை காணவில்லை என்றும், கண்டுபிடித்து தருமாறு அதிரை காவல்நிலையத்தில் கடந்த 26 ம் தேதி புகார் அளித்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பல்வேறு பகுதிகளிலும்  தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் திண்டிவனம் அருகே உள்ள ரோசனை காவல் நிலைய எல்லையில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். தகவலறிந்த ரோசனை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக அதிரை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவத்தை தொடர்பு கொண்டு தெரியப்படுத்தினார்.

இதையடுத்து அதிரை போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த பெண் காணாமல் போன கலைச்செல்வி என்பது தெரியவந்தது. இது தொடர்பாக ரோசனை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.