.

Pages

Wednesday, March 18, 2015

பட்டுக்கோட்டையில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு !

பட்டுக்கோட்டை காவல்துறை உதவி கண்காணிப்பாளர் டாக்டர் தீபாகணிக்கர் உத்தரவின் பேரில் ஜேசிஐ பட்டுக்கோட்டை விங்ஸ், போக்குவரத்து காவல்துறை இணைந்து பேருந்து நிலையம் எதிரில் கோடைகால தண்ணீர் பந்தலை திறந்துள்ளனர். திறப்பு விழாவில் பட்டுக்கோட்டை காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் கலந்து கொண்டு கோடைகால தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தண்ணீர், நீர்மோர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஜேசிஐ பட்டுக்கோட்டை விங்ஸ் தலைவர் வெங்கடேஷ், போக்குவரத்து பிரிவு எஸ்ஐ அபுதல்ஹா, எஸ்ஐ மதன் ராம்குமார், அதிரை சப்இன்ஸ்பெக்டர் ஹேமலதா, போக்குவரத்து பிரிவு எஸ்எஸ்ஐ சேகர், தலைமைக் காவலர் இளங்கோ, அதிரை எஸ்பி தனிப்பிரிவு எஸ்எஸ்ஐ அய்யாத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 comment:

  1. கோடை முன்பாக வந்தாச்சு சுட்டெரிக்கும் வெயிலில் தாகத்தை தணிக்க நகரில் நீர் பந்தல் பந்தாவோடு திறக்கப் படும் 3 நாட்களுக்கு தண்ணீர் கிடைக்கும் நான்காவது நாள் எம்ப்டி குடம் ஐந்தாவது நாள் மாடு ஒன்று அங்கே நிற்கும் ..... தன்னீர்க்காக.... இதனை யாராவது கவனிக்க தனி அமைப்பு உள்ளதா....?

    நாய்க்கு மட்டுமே ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் வேண்டும் பறவையோ அரைலிட்டர் தண்ணீரை தேடி பல கிலோமீட்டர் துாரம் பறக்கும். பறவையோ விலங்கோ உணவு கூட இல்லாமல் சமாளித்துவிடும் ஆனால் தண்ணீர் குடிக்காமல் அவைகளால் வாழ்வதற்கு சாத்தியமே இல்லை.

    வீட்டின் மாடியில் பறவைகளுக்காக தண்ணீர் வைக்கலாம் அதே போல் வாயில்லாத ஜீவன்களுக்காக வீட்டின் முன்பாக தண்ணீர் வைத்து அதன் தாகத்தை தீர்க்கலாம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.