.

Pages

Sunday, March 15, 2015

குப்பை பொறுக்கும் கோடீஸ்வரர் !

நீங்கள் மில்லியன் டாலர் உடைய கோடீஸ்வரராக இருந்தால் உங்கள் ஓய்வு நேரத்தை எப்படி செலவளிப்பீர்கள் ?  பஹ்ரைனில் தொழில் செய்யும் கொரியாவைச் சார்ந்த திரு.யோ வைப் போன்று நிச்சயம் நீங்கள் செய்ய மாட்டீர்கள்.

ஆம்! பஹ்ரைனில் 11 வருடங்களாக அதிகாலை 5 மணி முதல் கையுறையுடன் குப்பைகளை பொறுக்கும் கிடுக்கியுடனும் தான் வாழும் இடத்தில் சுற்றுப்புறங்களில் உள்ள குப்பைகளை சேகரித்து அதை பல வகையாக பிரித்து சமூக சேவை ஆற்றி வருகிறார் மில்லியனர் யோ. ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்ட போது இது எனக்கு விருப்பமானதாக இருக்கிறது என்கிறார்,

தனக்கு இரண்டு பெயர் இருப்பதாகவும், ஒன்று 'யோ' என்றும், மற்றொன்று சுத்தப்படுத்துவதின் தலைவர் என்றும் சந்தோசம் அடைகிறார். குப்பைகளால் மனிதர்கள் நோய்க்கு உள்ளாகுவதாகவும் தனக்கு குப்பைகளை கண்டால் பிடிப்பதில்லை என்றும் ஒரு சிகரெட் துண்டு கிடந்தாலும் அதையும் சுத்தம் செய்ய விரும்புவதாகவும் கூறுகிறார்.

ஒருமுறை யோ தனது அதிகாலை பணியை செய்து கொண்டிருக்கும் போது அங்கு வந்த போலீஸ் என்ன செய்கிறீர்கள் என்று விசாரித்துள்ளார்கள். குப்பை பொறுக்குவதை கூறியவுடன் , இவர் குப்பை பொறுக்கும் முனிசிபாலிடி தொழிலாளி என்று நினைத்து எங்கே கம்பெனி யூனிபார்ம் என்று கேட்டு உள்ளார்கள்.   பின்னர் நிலைமை தெரிந்தவுடன் போலீசார் பாராட்டி உள்ளனர்.
எங்கிருத்தோ வந்து எங்கள் நாட்டில் சுத்தம் பேண இவர் செய்யும் சேவை பஹ்ரைன் இளைஞர்களுக்கு ஒரு முன் மாதிரி என்கின்றனர் பஹ்ரைன் நாட்டவர்.

இந்தியாவின் சுத்தத்தின் முக்கியத்தை உணர்ந்து பிரதமரே "சுவாச் பாரத்" திட்டம் கொண்டு வந்துள்ளார். வீட்டை கூட்டி குப்பைகளை வெளியே ரோட்டில் தள்ளும் நமது ஊரில் இவர் போல் சமூக சேவகர்கள் வந்தால் தான் நமதூர் குப்பை பிரச்சினைக்கு தீர்வு வரும். ஒவ்வொருவரும் தனது வீட்டின் முன் குப்பை சேராமல் சுத்தமாக வைத்திருந்தாலே ஊர் முழுமையும் சுத்தம் பெற்றுவிடும்.
 
 

நன்றி:கீழக்கரை டைம்ஸ்

1 comment:

  1. மக்களின் தேவைகள் அதிகரிக்க குப்பைகளும் அதிகரிக்கும் அதே நேரத்தில் முறையாக கையலகாமல் இருந்தால் நோய்தான் உற்பத்தியாகும். தமிழகத்தில், பத்து டவுன் பஞ்சாயத்தில் மட்டுமே, மக்கும் குப்பையில் இருந்து மண்புழு மற்றும் இயற்கை உரம் தயாரிக்கும் பணி நடக்கிறது. இதில் நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் டவுன் பஞ்சாயத்தில் இதனை கையாளுகிறார்கள் இதே போல் நம்மவூரில் டன் கணக்கில் சேரும் குப்பைகளை உரம் தயாரித்தால் வருமானத்துக்கு வருமானம் ஊரும் சுத்தம். மாவட்ட நிர்வாகம் - அதிகாரிகள் முயற்சிப்பார்களா?

    கொரியாவைச் சார்ந்த ஜென்டில்மேன் யோ வைப் போன்று நிச்சயம் நாம் செய்யாவிட்டாலும் நம் வீட்டில் உள்ள குப்பைகளை முறையாக கொட்ட வேண்டிய இடத்தில் கொட்ட வேண்டும், சுற்றுபுறம் தூய்மைக்காக்க Clean இந்திய திட்டத்தை பின்பற்றுவோம்.

    கொரியாவைச் சார்ந்த ஜென்டில்மேன் யோ -க்கு வாழ்த்துக்கள் கோடி!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.