.

Pages

Wednesday, May 27, 2015

அதிரையில் ADT நடத்திய கோடைகால பயிற்சி முகாமின் நிறைவு நாள் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி !

அதிரை தாருத் தவ்ஹீத் ஏற்பாட்டில் வருடந்தோறும் நடைபெற்று வரும் கோடைகால பயிற்சி முகாம் இந்த வருடமும் மாணவிகளின் பங்களிப்புடன், அதிரை CMP லேன் பகுதியில் அமைந்துள்ள ALM பள்ளிக்கூடத்தில் கடந்த 10.05.2015 முதல் 25.05.2015 நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவிகள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.

பயிற்சி முகாமின் இறுதியில், முகாமில் பயின்ற மாணவிகள் மத்தியில் சிறப்புத் தேர்வுகள் மற்றும் மார்க்க அறிவு போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சி அதிரை ஏ.எல் மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அதிரை தாருத் தவ்ஹீத் தலைவர் அதிரை அஹ்மத் தலைமை வகித்தார். இதில் அதிரை தாருத் தவ்ஹீத் செயலர் ஜமீல் எம் ஸாலிஹ் நிகழ்ச்சி குறித்து அறிமுக உரையாற்றி, நிகழ்ச்சிகள் அனைத்தையும் வழிநடத்தி சென்றார்.

நிகழ்ச்சியில் அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி ஆசிரியையின் இஸ்லாமிய மார்க்க சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. இதன் பின்னர் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு தேர்வு எழுதி வெற்றி பெற்ற 100 க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவிகள் அனைவரும் பரிசுகளை பெற்றுச்சென்றனர். இந்த நிகழ்ச்சியில் மாணவிகள் - பெற்றோர்கள் என் ஏராளனாமனோர் கலந்துகொண்டனர். ஆண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
 
  

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.