.

Pages

Tuesday, May 26, 2015

அதிரை நியூஸ் கல்வி விருது விழாவை தொய்வின்றி நடத்திச்சென்ற பேராசிரியர் !

 
அதிரை நியூஸ் கல்வி விருது மற்றும் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா இன்று [ 25-05-2015 ] மாலை 5 மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

நிகழ்ச்சி சரியாக மாலை 5.05 மணிக்கு துவங்கி இரவு 7.35 மணிக்கு நிறைவுற்றது. இதில் நிகழ்ச்சிகள் அனைத்தையும் தொகுத்து வழங்கிய காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் செய்யது அஹமது கபீர் எவ்வித தொய்வின்றி விறுவிறுப்பாக நடத்தி சென்றார்.

5 comments:

  1. அகமது கபீர் அழகுபட ஆற்றி
    முகமன் நடையிலும் முத்தே - உகப்பு
    உள்ளே மிகுதியாய் ஊறியே வாழ்த்தினோம்
    துள்ளும் அழகுத் தொகுப்பு.

    ReplyDelete
  2. பேராசிரியர் செய்து அகமது கபீர் அவர்களை- அதிரை செய்த தவப்பயனால் நமதூருக்குக் கிடைத்த முத்து - என்றுதான் சொல்லவேண்டும்.

    ஒரு ஊருக்கு தனது வேலையின் காரணமாக சென்று இருக்கிறோம் நாம் உண்டு நமது வேலை உண்டு என்று இருப்பவர்களின் மத்தியில், தான் வேலை செய்கின்ற ஊரோடும் ஊரில் உள்ளவர்களோடும் ஊரின் பண்பாடு பழக்க வழக்கங்களுடன் ஒன்றிப் போய் அந்த ஊரில் நடைபெறும் அத்தனை நல்ல கெட்ட காரியங்களில் கலந்து கொண்டு சேவையாற்றிவரும் பேராசிரியரின் அர்ப்பணிப்பு அனைவராலும் பாராட்டத் தக்கது.

    நான் அறிந்தவரை பரக்கத் சாருக்கு அடுத்தபடியாக இந்த நல்ல தன்மைகள் வாய்க்கப் பெற்ற இந்த இளைஞர் நாம் அனைவராலும் மதிக்கபட்டுப் பாராட்டப்பட வேண்டியவர்.

    இவரது தொண்டுள்ளம்- அரிமா சங்கத்துடன் இவரது ஈடுபாடு- பொதுப்பணிகளில் இவரது தன்னலம் கருதாத தன்மைகள் ஆகிய நல்ல குணநலத்துக்காக இவரது வாழ்வில் இன்னும் வெற்றிகளையும் நீண்ட ஆயுளையும் வழங்கும்படி இறைவனை நாம் இறைஞ்சுவோம்.

    வெறும் புகழ்ச்சியல்ல உள்ளத்தின் வெளிப்பாடு.

    கபீர் சார்- நீங்கள் எங்கள் எங்கள் வீஈட்டுப் பிள்ளை- எல்லோர் வீட்டுக்கும் செல்லப் பிள்ளை.

    நேற்றைய நிகழ்ச்சியில் மேடையில் ஒரு பம்பரம் உங்கள் உருவில் சுற்றியது- சுழன்றது என்றுதான் சொல்ல வேண்டும்.

    ஷேக்கனா நிஜாம் அவர்களது வலதுகரமாக செயல்பட்ட உங்களை நினைக்க எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது.

    ReplyDelete
  3. கணீர்குரலில்கவர்ச்சிதமிழ்ழில்நிகழ்வைசோர்வின்றிநடத்திசென்றபேராசிரியர்அஹமதுகபீர்அவர்களுக்குஒருசபாஷ்!

    ReplyDelete
  4. விழாவின்வெற்றிக்குஅயராதுபாடுபட்டசகோதரர்சேகனாநிஜாம் மற்றும்அதிரைநியூஸ்குழுவினர்அனைவருக்கும்அல்லாஹ்தன்அருளையும்அன்பையும்பொழிவானாக!ஆமீன்.

    ReplyDelete
  5. பேராசிரியர்அஹமதுகபீர்அவர்களுக்கு


    அல்லாஹ்தன்அருளையும்அன்பையும்பொழிவானாக!ஆமீன்.

    madukkur hithayath


    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.