.

Pages

Sunday, May 24, 2015

இறுதி போட்டி வாய்ப்பை நூலிலையில் நழுவ விட்ட அதிரை AFFA அணி !

அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் [ AFFA ] நடத்தும் 12 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டியின் அரை இறுதி ஆட்டம் இன்று [ 24-05-2015 ] மாலை நமதூர் ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள கிராணி மைதானத்தில் சிறப்பாக துவங்கியது.

இதில் திருச்சி பாலு கனகராஜ் மெம்மோரியல் அணியினரும், அதிரை AFFA அணியினரும் மோதினார்கள். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 1-1 என்ற கணக்கில் கோல் அடித்து இரு அணிகளும் சமநிலையில் இருந்தனர். இதையடுத்து இரு அணிகளுக்கும் ட்ரை ப்ரேக்கர் வாய்ப்பு வழங்கப்பட்டது. இறுதியில் 5-4 என்ற கோல் கணக்கில் திருச்சி பாலு கனகராஜ் மெம்மோரியல் அணியினர் வெற்றி பெற்றனர்.

நாளை மறுநாள் [ 26-05-2015 ] நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்ற திருச்சி  பாலு கனகராஜ் மெம்மோரியல் அணியினரும், தென்னரசு பள்ளத்தூர் ( காரைக்குடி ) அணியினரும் மோத இருக்கின்றனர். இன்றைய ஆட்டத்தில் முதல் கோல் அடித்த திருச்சி அணியின் வீரருக்கு ரூ 600 சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

வழக்கம் போல் இன்றைய ஆட்டத்தின் அம்பயர்களாக வாசு தேவன் பணியாற்றினர். நிகழ்ச்சிகள் அனைத்தையும் வழக்கம் போல் அஹமது ஹாஜா இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார்.

இன்றைய ஆட்டத்தை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மைதானத்திற்கு திரளாக வருகை தந்து ரசித்தனர். நாளை மறுநாள் நடைபெற இருக்கிற இறுதி ஆட்டம் சரியாக மாலை 4.30 மணிக்கு துவங்கும் என அறிவிப்பு செய்யப்பட்டது. ஆட்ட இறுதியில் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதில் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் பரிசு மற்றும் கோப்பை , பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட இருக்கின்றனர்.
கம்பிரமாக காட்சியளிக்கும் திருச்சி அணியினர்
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.