.

Pages

Tuesday, May 26, 2015

சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது திருச்சி அணி !

அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் [ AFFA ] நடத்தும் 12 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று [ 26-05-2015 ] மாலை நமதூர் ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள கிராணி மைதானத்தில் சிறப்பாக துவங்கியது.

இதில் திருச்சி பாலு கனகராஜ் மெம்மோரியல் அணியினரும், தென்னரசு பள்ளத்தூர் ( காரைக்குடி ) அணியினரும் மோதினார்கள். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில்இரு அணிகளும் கோல் ஏதும் போடாமல் சமநிலையில் இருந்தனர். இதையடுத்து ட்ரை பிரேக்கர் வாய்ப்பு வழங்கப்பட்டது. இறுதியில் 4-3 என்ற கணக்கில் திருச்சி பாலு கனகராஜ் மெம்மோரியல் அணியினர் வெற்றி பெற்றனர்.

இதையடுத்து பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சாம்பியன் பட்டதை பெற்ற திருச்சி அணியினருக்கு ரொக்க பரிசு, சுழற்கோப்பை, பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இரண்டாமிடத்தை பிடித்த தென்னரசு பள்ளத்தூர் ( காரைக்குடி ) அணியினருக்கும் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. மேலும் ஆட்ட தொடரில் சாதனை நிகழ்த்திய வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக இன்றைய இறுதி ஆட்டத்தை காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. ஜலால், துணை முதல்வர் உதுமான் முகைதீன், பேராசிரியர் செய்யது அஹமது கபீர், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன், உடற்கல்வி ஆசிரியர் திரு ராமச்சந்திரன், தக்வா பள்ளி டிரஸ்ட் உறுப்பினர் M.B அபூபக்கர்,  AFFA தலைவர் செய்யது முஹம்மது புஹாரி, துணைதலைவர் முஹம்மது தமீம், செயலாளர் சமியுல்லாஹ், பொருளாளர் அபுல் ஹசன் சாதுலி, துணைச்செயலாளர் அஹமது அனஸ், ஒருங்கிணைப்பாளர்கள் சேக் தம்பி, இத்ரீஸ், அஸ்ரப், பாருக், தாரிக், கால்பந்தாட்ட பயிற்சியாளர்கள் அன்வர் அலி, லியாகத் அலி ஆகியோர் வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து இன்றைய இறுதி ஆட்டத்தை துவக்கி வைத்தனர்.

வழக்கம் போல் இன்றைய ஆட்டத்தின் அம்பயர்களாக வாசு தேவன் பணியாற்றினர். நிகழ்ச்சிகள் அனைத்தையும் வழக்கம் போல் அஹமது ஹாஜா இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார்.

இன்றைய இறுதி ஆட்டத்தை காண வழக்கத்தை வீட ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மைதானத்திற்கு திரளாக வருகை தந்து ரசித்தனர்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.