.

Pages

Tuesday, May 26, 2015

எழுத்தாளர் அதிரை அஹ்மத் அவர்களுக்கு சிறந்த எழுத்தாளர் விருது !

அதிரை சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்களை இனங்கண்டு அவர்களின் பணிகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் 'அதிரை நியூஸ் கல்வி விருது - சாதனையாளர்கள் விருது 2015' என்ற பெயரில் விருது வழங்கும் விழா நேற்று மாலை அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

அதிரையின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். இஸ்லாம் ஓர் அறிமுகம், இஸ்லாமிய இலக்கியச் சிந்தனை,மழைப்பாட்டு (உரை), Wisdom in the Dawn (English), இளமைப் பருவத்திலே  (Wisdom in the Dawn  என்ற நூலின் மொழிபெயர்ப்பு), ஆயிஷாவின் சிறுமிப் பாட்டு (சிறுவர் மரபுக் கவிதைகள்), அரும்புப் பாட்டு (பதிப்பில்), பெண்மணி மாலை (மரபுக் கவிதைகள்),ஒருமைப் பாட்டு (மரபுக் கவிதைகள்), இறையருட்கவிமணி மாலை (மரபுக் கவிதைகள்), அருமையான வாழ்வும் அமைதியான இறப்பும், ஏசுவை நேசித்தேன் பேறு பெற்ற பெண்மணிகள் பாகம் -1, பேறு பெற்ற பெண்மணிகள் பாகம் – 2,நபி வரலாறு, நம் பிள்ளைகளுக்கு,  நபி வரலாறு (விரிவு), சல்மான் அல் ஃபாரிஸி ( மொழிபெயர்ப்பு ), அலீ பின் அபீதாலிபு,கப்பாப் இப்னுல் அறத்து ( மொழிபெயர்ப்பு ), அபூதர் அல்ஃகிஃபாரி. மிக்தாத் இப்னுல் அஸ்வத் (மொழிபெயர்ப்பு), இறைத்தூதர் முஹம்மத், வட்டியை ஒழிப்போம்! (மொழிபெயர்ப்பு), அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (இலக்கியச் சோலை), தொழுகையாளிகளே! (மொழிபெயர்ப்பு - மூலம்: அரபி), மொட்டுகளே மலருங்கள்! ,   கவிதை – ஓர் இஸ்லாமியப் பார்வை, நல்ல தமிழ் எழுதுவோம்!, ஈமான் – இஸ்லாம் கவி மலர்கள்   உள்ளிட்ட மொத்தம் 29 நூல்களை எழுதியுள்ளார்.

அதிரை சமுதாய நல மன்றம் – பத்தாம் ஆண்டு சிறப்பு மலர், ‘பிறை’ பத்திரிகை சார்பில் ‘அதிரை செக்கடிப் பள்ளி’ திறப்பு விழா மலர்,‘வேலூர் பாகியாத்துஸ் சாலிஹாத்’ நூற்றாண்டு விழா மலர், ‘சீறாப்புராணம்’ – நாச்சிகுளத்தார் வெளியீடு, அதிரை ஜீவரத்ன கவிராஜரின் ‘மழைப்பாட்டு’,.       ‘அல்லாமா அப்துல் வஹ்ஹாப்’ நினைவு மலர், முத்துப்பேட்டை ‘அல் மஹா மலர்கள்’ ஆகியவற்றை தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் பல்வேறு தமிழ் இலக்கிய மாநாடுகளில் கலந்துகொண்டுள்ளார். மேலும் மரபுக்கவிதை பலவற்றையும் எழுதி வருவது, பல நூல்களுக்கு வாழ்த்துரை வழங்கி வருவது உள்ளிட்ட பணிகளுக்காக விருது வழங்கப்பட்டது. இந்த விருதை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் குணசீலன் வழங்கி கெளரவித்தார்.

சிறந்த எழுத்தாளர் விருது பெற்ற அதிரை அஹ்மத் அவர்களை நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

5 comments:

  1. உள்ளூர் மாணிக்கம் விலை போகாது என்பார்கள். அதுபோல நம் அதிரை அஹ்மத் அவர்களைப்பற்றி நமதூர் மக்கள் அவ்வளவாக தெரிந்ததில்லை. அவர்களும் அதை விரும்புபவர்கள் அல்ல. 1970-களில் KMC -ன் முதல்வராக இருந்த இறையருட்கவிமணி பேராசிரியர் கா. அப்துல் கபூர் அவர்களிடம் பயின்று, பிறை பத்திரிக்கையின் ஆசிரியர் மௌலானா அப்துல் வஹாப் சாஹிப் M A B Th அவர்களின் தொடர்பில் இருந்து, திரியெம் பிரிண்டர்சாரின் அன்றைய பங்குதாரர்களில் ஒருவரான மர்ஹூம் அப்துல் பத்தாஹ் பாகவி பரிந்துரையில் பாகியாதுஸ்ஸாலிஹாத்தில் பணியாற்றியதால் அவர்களின் மொழி மற்றும் மார்க்க கல்வியின் திறன் அவர்களின் படைப்புகளில் நன்கு வெளிப்படுகிறது.

    கல்வியில் சிறந்து விளங்கும் மாணாக்கர்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களையும், தகடு தட்டுகளையும் பரிசாக வழங்காமல், இவர்களின் படைப்புகளை பரிசுப்பொருளாக வாங்கி கொடுத்து அவரக்ளிடையே இவர்களைப்போன்ற திறமையான படிப்பாளிகளை உருவாக்க கல்வி ஸ்தாபனங்கள் முன் வரவேண்டும்.

    ReplyDelete
  2. அதிரைஅஹமது அவர்களுக்குநல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. எங்கள் அருமை முதல்வர் அதிரை அஹமது காக்கா அவர்களுக்கு முத்துப் பேட்டை அல்மஹா அறக்கட்டளையின் பெண்கள் கல்லூரியின் நிர்வாகம், நிறுவனர் உதவி முதல்வர், அலுவலகப் பணியாளர்கள், மற்றும் மாணவிகள் சார்பாக அன்பான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. ஒரு மூத்த அறிஞர் பெருமகனை காலம் கடந்து அதிரை கவுரவப்படுத்தி இருக்கிறது. அதிரை நியூசுக்கு மிக்க நன்றி. தேர்வுக்குழுவின் உறுப்பினர் என்ற முறையில் மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  5. ஒரு மூத்த அறிஞர் பெருமகனை காலம் கடந்து அதிரை கவுரவப்படுத்தி இருக்கிறது. அதிரை நியூசுக்கு மிக்க நன்றி. தேர்வுக்குழுவின் உறுப்பினர் என்ற முறையில் மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.