.

Pages

Sunday, May 24, 2015

அதிரையில் TNTJ நடத்திய இரத்த தானம் முகாமில் இளைஞர்கள் பலர் பங்கேற்பு !

தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மற்றும் தமிழக தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளையினர் இணைந்து நடத்திய இரத்த தானம் முகாம் இன்று [ 24-05-2015 ] காலை நடுத்தெரு ஆய்ஷா மகளிர் அரங்கில் நடைபெற்றது.

தமிழக தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளை தலைவர் பீர் முஹம்மது தலைமையில் நடைபெற்ற இரத்ததான முகாமில் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ குழுவினர்கள் இரத்த கொடையாளர்களிடமிருந்து இரத்தம் பெற்றனர்.

இதில் தமிழக தவ்ஹீத் ஜாமத்தின் நிர்வாகிகள் - உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று இரத்த தானம் செய்தனர்.

மாவட்ட பேச்சாளர் அன்வர் அலி, கிளை நிர்வாகிகள் எஸ்.பி பக்கீர் முஹம்மது, எம்.ஐ அப்துல் ஜப்பார், இரத்ததான பொறுப்பாளர் ஹாஜி முஹம்மது, எம்.கே.எம் ஜமால் முஹம்மது, தமீம் அன்சாரி, மீரா, சுலைமான், தமீம் அன்சாரி உள்ளிட்ட தவ்ஹீத் ஜமாத்தினர் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவ குழுவினருடன் இணைந்து இரத்த கொடையாளருக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகின்றனர். முகாம் தொடர்ந்து மதியம் 2 மணி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் யூனிட் இரத்தம் பெறப்பட்டது.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.