.

Pages

Sunday, May 17, 2015

AFFA: இன்றைய ஆட்டத்தில் திருச்சி அணி வெற்றி ! நாளை நான்கு ஆட்டங்கள் !!

அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் [ AFFA ] நடத்தும் 12 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டியின் 7 ம் நாள் ஆட்டம் இன்று [ 15-05-2015 ] மாலை நமதூர் ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள கிராணி மைதானத்தில் சிறப்பாக துவங்கியது.

இன்று கால் இறுதி ஆட்டம் நடைபெற இருக்கிறது. இதில் திருச்சி பாலு கனகராஜ் மெம்மோரியல் அணியினரும், தஞ்சை அருள் அணியினரும் மோதினார்கள். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 1-0 என்ற கணக்கில் கோல் அடித்து திருச்சி பாலு கனகராஜ் மெம்மோரியல் அணியினர் வெற்றி பெற்றனர். இதில் தஞ்சை அருள் அணியினர் கடந்த முறை சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கம் போல் இன்றைய ஆட்டத்தின் அம்பயர்களாக வாசு தேவனும், ஷபா ஆகியோர் பணியாற்றினர். நிகழ்ச்சிகள் அனைத்தையும் வழக்கம் போல் அஹமது ஹாஜா இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார்.

இன்றைய ஆட்டத்தை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மைதானத்திற்கு திரளாக வருகை தந்து ரசித்தனர்.

நாளை நான்கு ஆட்டங்கள் நடைபெற இருக்கிறது. காலையிலும், மாலையிலும் தலா இரண்டு ஆட்டங்களை நடத்த நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். நாளை காலை 9 மணியளவில் பட்டுக்கோட்டை AVK அணியினரும், வடிவேல் மெம்மோரியல் புதுக்கோட்டை அணியினரும் முதல் ஆட்டத்தில் விளையாட இருப்பதாகவும், இரண்டாவது ஆட்டமாக பிரண்ட்ஸ் புட்பால் கிளப் புதுக்கோட்டை அணியினரும், காரைக்குடி பள்ளத்தூர் அணியினரும்,  விளையாட இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். 

1 comment:

  1. affa need seprate play ground .affa is our home team adirai people should help the team affa player have edujual talent has .we should encourage our home team

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.