.

Pages

Tuesday, May 26, 2015

பள்ளி அளவில் முதல் இடம் பிடித்த இமாமுதீனுக்கு சிறப்பு பரிசு !

தமிழகமெங்கும் SSLC தேர்வின் முடிவு கடந்த [ 21-05-2015 ] அன்று வெளியானது. இந்த தேர்வில் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் மொத்தம் 219 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் பிரபல இணையதள எழுத்தாளரும் அதிரை நியூஸ் நிர்வாகிகளில் ஒருவருமாகிய முகைதீன் சாஹிப் ( அதிரை மெய்சா ) மகன் இமாமுதீன் 477 / 500 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதல் இடம் பிடித்து சாதனை நிகழ்த்தினர்.

இந்நிலையில் இவருக்கு இன்று மாலை நடைபெற்ற அதிரை நியூஸ் கல்வி விருது மற்றும் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட கல்வி அலுவலர் முனைவர் கோ. ராஜசேகரன் ரொக்கம் ₹ 2000/- பரிசு தொகை , பதக்கம், சான்றிதழ் வழங்கி பாராட்டி வாழ்த்தினார். இந்த பரிசு காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் வழங்கப்பட்டது.

6 comments:

  1. அதிரை மெய்சாவின் நம்பிக்கை
    அழகாய் அறிவில் காட்டுது வளர்ப்பை.

    ReplyDelete
  2. எனது மகனார் இமாமுதீன் உலகக்கல்வியிலும் மார்க்கக்கல்வியிலும் சிறந்து விளங்கி பெற்றோர்களுக்கும் கல்வி பயில்விக்கும் ஆசானுக்ககும் நற்ப்பெயரை ஏற்படுத்தித்தர துவா செய்யுங்கள்.

    ReplyDelete
  3. எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  4. பரிசளிப்பு மேடைக்கு இமாமுதீனின் பெயர் சொல்லி அழைக்கப்பட்டபோது ஒரு வீறு கொண்ட வேங்கை போல மேடை ஏறினார். இன்னும் நிறைய சாதிப்பேன் என்ற ஒரு உத்வேகம் அவரது முகத்தில் தென்பட்டது.

    இனி அவரது வாழ்வில் இன்னும் பல ஏற்றங்களும் சாதனைகளும் தொடர நாம் துஆச் செய்வோம்.

    ReplyDelete
  5. பரிசளிப்பு மேடைக்கு இமாமுதீனின் பெயர் சொல்லி அழைக்கப்பட்டபோது ஒரு வீறு கொண்ட வேங்கை போல மேடை ஏறினார். இன்னும் நிறைய சாதிப்பேன் என்ற ஒரு உத்வேகம் அவரது முகத்தில் தென்பட்டது.

    இனி அவரது வாழ்வில் இன்னும் பல ஏற்றங்களும் சாதனைகளும் தொடர நாம் துஆச் செய்வோம்.

    ReplyDelete
  6. மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
    என்நோற்றான் கொல்எனும் சொல்.
    

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.