.

Pages

Friday, May 22, 2015

முத்துப்பேட்டை மாணவிகள் மாநிலத்தில் இரண்டாமிடம் பிடித்து சாதனை !

முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆ.ஜெயஸ்ரீ 10-ம் வகுப்பு தேர்வில் 498 மதிப்பெண் எடுத்து மாநிலத்தில் 2-ம் இடம் பிடித்துள்ளார். சாதனைப்படைத்த மாணவி ஜெயஸ்ரீக்கு பள்ளி முதல்வர் சகுந்தலா, தாளாளர் முகம்மது யாசின் மற்றும் ஆசிரியைகள் இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவித்தனர். இது குறித்து மாணவி ஜெயஸ்ரீ கூறுகையில்: எனக்கு பள்ளியின் ஆசிரியைகள், எனது பெற்றோர்கள் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். இதனால்தான் என்னால் இந்த அளவுக்கு மதிப்பெண் பெற முடிந்தது. நான் டாக்டர் ஆகி மக்களுக்கு சேவை செய்வேன் என்றார்.

அதே போல் முத்துப்பேட்டை பிரிலியண்ட் மெட்ரிக் பள்ளி மாணவி முஃபிதா பர்வீன் 498 மதிப்பெண் மதிப்பெண் பெற்று மாநிலத்தில் 2-ம் இடம் பிடித்துள்ளார். சாதனை படைத்த மாணவி முஃபிதா பர்வினுக்கு பள்ளியின் முதல்வர் சுசித்ரா, தாளாளர் முகம்மது யாகூப் ஆகியோர் இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவித்தனர். சாதனை படைத்த மாணவி முஃபிதா பர்வின் கூறுகையில்: பள்ளியின் ஆசிரியர்கள் எனக்கு நன்கு ஆதரவு அளித்து எனக்கு பாடம் கற்பித்து தந்தார்கள். அவர்களின் முழு முயற்சியே எனக்கு பெரும் வெற்றியை தேடி தந்தது. வருங்காலத்தில் டாக்டர் ஆகி மக்களுக்கு சேவை செய்வேன் என்றார்.

செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.

    இந்த நிகழுவு மூலம் ஒரு உத்வேகம் பிறக்கட்டும், வென்றவர்கள் மிகிழட்டும், வெற்றியை இழந்தவர்கள் மறுவருடம் வெற்றிபெற முயலட்டும்.

    வருடா வருடம் இன்னும் மேலாக மலர்ந்து மலரட்டும்.

    எல்லாவற்றிர்க்கும் மேலாக, நம் அனைவரையுய்ம் படைத்த வல்ல நாயனை நினைக்க மறக்க வேண்டாம்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.