.

Pages

Friday, May 29, 2015

அதிரையில் கோலாகலமாக துவங்கியது வரலாற்று கண்காட்சி !

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் தமிழகமெங்கும் கடந்த ஏப்ரல் முதல் மே மாதம் வரை மக்கள் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மொத்தம் 110 இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் கொடியேற்றம், கண்காட்சி, நாடகம், ஆவணப்படம், விளையாட்டு போட்டிகள், சமூக நல்லிணக்க சந்திப்பு, பரிசளிப்பு, பொதுக்கூட்டம் உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக இன்று காலை புதுமனைத்தெரு சித்திக் பள்ளி அருகில் மாபெரும் வரலாற்று கண்காட்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பட்டுக்கோட்டை டிவிசன் தலைவர் வழக்கறிஞர் எஸ். நிஜாமுதீன் தலைமை வகித்தார். எஸ்டிபிஐ தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Z. முஹம்மது இல்யாஸ், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தஞ்சை மாவட்ட பொதுச்செயலாளர் ஜே. ஹாஜி சேக், பாப்புலர் ஃப்ரண்ட் தின உரையை தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் Z. முஹம்மது தம்பி மற்றும் அதிரை நகர PFI பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் எம். முஹம்மது பைசல் PFI கொடியேற்றி வைத்தார். இதையடுத்து மாநாட்டு கண்காட்சியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஏ. ஹாஜா அலாவுதீன் துவக்கி வைத்தார்.

இதில் அதிரை பூர்விக வரலாறு, இஸ்லாமிய வரலாறு, இந்தியாவில் இஸ்லாத்தின் வருகை, சுதந்திரப் போரில் முஸ்லீம்களின் பங்கு, இஸ்லாமியர்களின் அறிவியல் சாதனைகள், பள்ளி குழந்தைகளின் அறிவியல் படைப்பு திறன், ஆவணப்படம் உள்ளிட்டவை இடம்பெற்றது. இதில் பெண்கள், மாணவ மாணவிகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு கண்காட்சியை பார்த்து வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.