.

Pages

Sunday, May 31, 2015

முத்துப்பேட்டையில் பரபரப்பு: அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக கூறி TNTJ நிர்வாகிகள் 30 பேர் கைது !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முத்துப்பேட்டை கிளைகளின் சார்பில் முத்துப்பேட்டை அ.நெ பள்ளி அருகில் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் எம்.ஏ ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில பேச்சாளர் முஹம்மது மஹ்தூம்,  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பேச்சாளர் பாஜிலா பர்வீன் ஆலிமா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிலையில் முத்துப்பேட்டையில் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்தியதாக கூறி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் 30 பேரை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். மேலும் கூட்டத்திற்கு ஒலி ஒளி அமைத்த கொடுத்த 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களின் மைக்செட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் முத்துப்பேட்டையில் பரபரப்பான சூழ்நிலை உருவாகி உள்ளது.
 
 
 
செய்தி:
நிருபர் மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.