பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் தமிழகமெங்கும் கடந்த ஏப்ரல் முதல் மே மாதம் வரை மக்கள் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மொத்தம் 110 இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் கொடியேற்றம், வரலாற்று கண்காட்சி, நாடகம், ஆவணப்படம், விளையாட்டு போட்டிகள், சமூக நல்லிணக்க சந்திப்பு, பரிசளிப்பு, பொதுக்கூட்டம் உள்ளிட்டவை நடைபெற்றது.
மக்கள் சங்கமம் மாநாட்டின் இறுதி நிகழ்ச்சியாக நேற்று மாலை புதுமனைத்தெரு சித்திக் பள்ளி அருகில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பட்டுக்கோட்டை டிவிசன் தலைவர் வழக்கறிஞர் எஸ். நிஜாமுதீன் தலைமை வகித்தார். அதிரை அனைத்து ஜமாத் நிர்வாகிகள், எஸ்டிபிஐ தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Z. முஹம்மது இல்யாஸ், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஏ. ஹாஜா அலாவுதீன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தஞ்சை மாவட்ட பொதுச்செயலாளர் ஜே. ஹாஜி சேக், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் எம். முஹம்மது பைசல், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் Z. முஹம்மது தம்பி மற்றும் அதிரை நகர PFI பொறுப்பாளர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில செயலாளர் எம். முஹம்மது ரசீன், மாநில பேச்சாளர் கோவை ஏ. ஹாரூன், காரைக்கால் மாவட்ட தலைவர் ஏ. முஹம்மது ஹசன் குத்தூஸ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
விழாவில் கல்வியில் சாதனை படைத்தவர்களுக்கான பரிசுகள், அதிரையளவில் உள்ள சிறந்த சாதனையார்களுக்கான விருது மற்றும் மக்கள் சங்கமம் மாநாட்டின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, வினாடி வினா, கிராத் போட்டி, சாக்கு போட்டி, பிஸ்கட் கடித்தல் உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகள், மராத்தான் ஓட்டபந்தய போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்கள் உள்ளிட்டோருக்கான மொத்தம் 500 க்கும் மேற்பட்ட பரிசுகள் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
முன்னதாக டிவிசன் செயலாளர் எம் சேக் அஜ்மல் வரவேற்புரை ஆற்றினார். விழா முடிவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அதிரை நகர தலைவர் அஹமது ரிழா நன்றி கூறினார். இதில் பெண்கள் உட்பட ஏராளமானோர் திரளாக கலந்துகொண்டனர்.
மக்கள் சங்கமம் மாநாட்டின் இறுதி நிகழ்ச்சியாக நேற்று மாலை புதுமனைத்தெரு சித்திக் பள்ளி அருகில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பட்டுக்கோட்டை டிவிசன் தலைவர் வழக்கறிஞர் எஸ். நிஜாமுதீன் தலைமை வகித்தார். அதிரை அனைத்து ஜமாத் நிர்வாகிகள், எஸ்டிபிஐ தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Z. முஹம்மது இல்யாஸ், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஏ. ஹாஜா அலாவுதீன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தஞ்சை மாவட்ட பொதுச்செயலாளர் ஜே. ஹாஜி சேக், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் எம். முஹம்மது பைசல், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் Z. முஹம்மது தம்பி மற்றும் அதிரை நகர PFI பொறுப்பாளர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில செயலாளர் எம். முஹம்மது ரசீன், மாநில பேச்சாளர் கோவை ஏ. ஹாரூன், காரைக்கால் மாவட்ட தலைவர் ஏ. முஹம்மது ஹசன் குத்தூஸ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
விழாவில் கல்வியில் சாதனை படைத்தவர்களுக்கான பரிசுகள், அதிரையளவில் உள்ள சிறந்த சாதனையார்களுக்கான விருது மற்றும் மக்கள் சங்கமம் மாநாட்டின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, வினாடி வினா, கிராத் போட்டி, சாக்கு போட்டி, பிஸ்கட் கடித்தல் உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகள், மராத்தான் ஓட்டபந்தய போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்கள் உள்ளிட்டோருக்கான மொத்தம் 500 க்கும் மேற்பட்ட பரிசுகள் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
முன்னதாக டிவிசன் செயலாளர் எம் சேக் அஜ்மல் வரவேற்புரை ஆற்றினார். விழா முடிவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அதிரை நகர தலைவர் அஹமது ரிழா நன்றி கூறினார். இதில் பெண்கள் உட்பட ஏராளமானோர் திரளாக கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.