.

Pages

Thursday, May 21, 2015

SSLC தேர்வில் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் நிகழ்த்திய சாதனை !

தமிழகமெங்கும் SSLC தேர்வின் முடிவு இன்று காலை வெளியானது. இந்த தேர்வில் அதிரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் மொத்தம் 188 மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 99 சதவீத மதிப்பெண்கள் பெற்று பள்ளி சாதனை  நிகழ்த்தியுள்ளது. இவை சென்ற ஆண்டைவீட இந்த ஆண்டு கூடுதல் சதவிதத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதில் பள்ளியளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள மாணவிகளின் விவரங்கள்:
முதல் இடம் : ( மாநில அளவில் மூன்றாம் இடம் ) 
பெயர் : M.T. பர்வின் சுல்த்தானா 
த/பெ : முஹம்மது தவ்பீக்
பெற்ற மதிப்பெண்கள் : 497 / 500

இரண்டாம் இடம் :
பெயர் : J. செய்யது அலி பாத்திமா
த/பெ : ஜமால் முகைதீன் 
பெற்ற மதிப்பெண்கள் : 490 / 500

மூன்றாம் இடம் :
பெயர் : K. ஐஸ்வர்ய லெட்சுமி
த/பெ : கதிர்வேல்
பெற்ற மதிப்பெண்கள் : 478 / 500

6 comments:

  1. தங்களின் கடின உழைப்பால் வாகைசூடி ஊருக்கு கண்ணியம் சேர்த்த அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

    உங்கள் வெற்றிப்பயணம் தொடர அல்லாஹ் அருள் செய்வானாக!

    ReplyDelete
  2. வாழ்த்துகள்....

    ReplyDelete
  3. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மீண்டும் சாதனை புரிய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. முதல் இடம் : ( மாநில அளவில் மூன்றாம் இடம் )
    பெயர் : M.T. பர்வின் சுல்த்தானா
    த/பெ : முஹம்மது தவ்பீக்
    பெற்ற மதிப்பெண்கள் : 497 / 500

    எல்லாம் வல்ல இறைவனால் கூடாத காரியம் ஏதும் உண்டோ? பெற்றோர்களின் துஆ, மாணவியின் விடாமுயசி, இறைவன் கொடுத்த கூலி.

    மாஷா அல்லாஹ்.

    எனது மருமகன் முஹம்மது தவ்பீக் உடைய மகள் ஆவார், எனக்கு பேத்தி முறை வரும்.

    ReplyDelete
  5. மூன்றாம் இடத்தில் மாநிலத்தைத் தொட்ட மாணவியும், பள்ளியும் அனைவரின் வாழ்த்து மழையினில் ஆனந்ந்தம். இதுபோல் இன்னும் முதலிடம் பெற்றுப் பள்ளிச் சாதனைப் புரிய, அதிரையர் ஆனந்தம் அடைய ஆவல்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.