.

Pages

Wednesday, May 20, 2015

அதிரையில் தமுமுகவினர் நடத்திய பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு !

அதிரையில் இன்று மாலை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் சமுதாய எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் அஹமது ஹாஜா தலைமை வகித்தார். தமுமுக அமீரக ( அல் அய்ன் ) மண்டல செயலாளர் அப்துல் ரஹ்மான், நகர செயலாளர் சாதிக்பாட்சா, மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் காதர், ஜபருல்லா, அப்துல் சலாம், நகர துணை செயலாளர் தமீம் அன்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

'இந்தியாவில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்' என்ற தலைப்பில் தமுமுக மாநில பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது உரையாற்றினார். தமுமுக தலைமை கழக பேச்சாளர் பழனி M.I.பாருக் 'யார் பயங்கர வாதிகள் ?' என்ற தலைப்பில் உரையாற்றினார். தமுமுக தலைமை கழக பேச்சாளர் திருச்சி ரபிக் 'சமுதாயமும் இன்றைய இளைஞர்களும்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.

முன்னதாக தமுமுக நகர பொருளாளர் செய்யது முஹம்மது புஹாரி வரவேற்புரை ஆற்றினார்.

இந்த கூட்டத்தில் அதிரை அரசு மருத்துவமனையில் தற்போது நான்கு மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். 24 மணி நேர சேவையை அமல்படுத்துவதற்கு கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என மருத்துவ துறையிடம் வலியுறுத்துவது, அதிரை பகுதியில் வீட்டில் ஏற்படும் திடீர் மின்பழுதை சரிசெய்வதற்கு 100, 150 என கட்டாய வசூலில் ஈடுபடும் மின்சார வாரிய ஊழியர்களை வன்மையாக கண்டிப்பது என்றும், இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மின்சார வாரிய அலுவலர்களிடம் கேட்டுக்கொள்வது என்றும், அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 17 மற்றும் 19 ஆகிய வார்டு கவுன்சிலர்களின் சார்பில் பேரூராட்சியிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகளை 15 தினங்களுக்குள் நிறைவேற்றி தர வேண்டும் எனவும். தவறினால் இந்த பகுதிகளில் கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் இலண்டன் வாழ் அதிரையர் இம்தியாஸ் ஏற்பாட்டில் 21 ஆயிரம் மதிப்பீட்டில் அவசரகால மருத்துவ சிகிச்சையின் போது பயனளிக்கும் ஆக்சிஜன் சேமிக்கும் சிலிண்டர், தமுமுக அதிரை நகர பொறுப்பாளர்களிடம் தானமாக வழங்கப்பட்டது. இவற்றை இத்ரீஸ், தமுமுக பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது  மற்றும் தமுமுக தலைமை கழக பேச்சாளர்கள் முன்னிலையில் தமுமுக அதிரை நகர செயலாளரிடம் ஒப்படைத்தார்.

கூட்டத்தின் இறுதியில் நகர துணை செயலாளர் கமாலுத்தீன் நன்றி கூறினார். இந்த கூட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.