முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்ததால் புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்ட விவகாரத்தில் காவல் துறையை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முத்துப்பேட்டை அருகே கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர்.
முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஜெயபால். இவரது மகள் பிரியதர்ஷினி(25). இவர் எம்.பி.ஏ. மற்றும் 3 பட்டப்படிப்புகள் முடித்துள்ளார். இவருக்கும் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த கரிக்காடு கிராமத்தைச் சேர்ந்த அரசு போக்கு வரத்து கழக தொ.மு.ச தலைவர் ஜெயராமன் மகன் தமிழ்மணி(30). (இவர் சிங்கப்பூரில் பணிப்புரிகிறார்) ஆகிய இருவருக்கும் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டு கடந்த 02.02.2015-ம் அன்று திருமணம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன் 10 நாள் கழித்து மணமகன் தமிழ்மணி சிங்கப்பூர் நாட்டுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் பிரியதர்ஷினி குன்னலூரில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார். சில நாட்களில் கணவன் தமிழ்மணிக்கு ஏற்கனவே பட்டுக்கோட்டையை அடுத்த முதல்சேரி கிராமத்தைச் சேர்ந்த சத்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து 2 குழந்தைகள் உள்ள தகவல் பிரியதர்ஷினிக்கு தெரிய வந்தது. இதனால் கடும் மன உலைச்சலில் பிரியதர்ஷினி காணப்பட்டார். இந்த நிலையில் கடந்த மே 01-ம் தேதி, முதல் மனைவி சத்யா, பிரியதர்ஷினிக்கு போன் செய்து மிரட்டி உள்ளார். இதனால் மன வேதனை அடைந்த பிரியதர்ஷினி அன்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பிரியதர்ஷினி தந்தை ஜெயபால் எடையூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் முருகன் சம்பவ இடத்திற்கு சென்று தற்கொலை செய்து கொண்ட பிரியதர்ஷினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் முதல் திருமணத்தை மறைத்து ஏமாற்றி மீண்டும் திருமணம் செய்தும் மற்றும் திருமணம் நடந்து 2 மாதத்தில் புது பெண் தற்கொலை செய்துக் கொண்டதால் மன்னார்குடி ஆர்.டி.ஓ செல்வசுரப்பி அன்றைய தினம் தற்கொலை செய்துக் கொண்ட பிரியதர்ஷினியின் உடலை பார்வையிட்டு உறவினரிடம் விசாரணை நடத்தினார். அதன் பிறகு இந்த வழக்கு தொடர்பாக ஏமாற்றி திருமணம் செய்த தமிழ்மணி மற்றும் பிரியதர்ஷினியை மிரட்டிய முதல் மனைவி சத்யா ஆகியோர் மீது இதுநாள் வரை காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் சென்ற வாரம் சிங்கப்பூரிலிருந்து வந்த தமிழ்மணியை விசாரணை செய்த போலீசார் அப்பொழுதும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் தமிழ்மணி சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். இதனால் அதிர்ப்தி அடைந்த பிரியதர்ஷினியின் தந்தை ஜெயபால் மற்றும் உறவினர்கள் நேற்று எடையூர் காவல் நிலையம் சென்று இன்ஸ்பெக்டர் முருகனிடம் ஏன் தமிழ்மணி மீது நடவடிக்கை எடுக்க வில்லை ? அவரை ஏன் வெளிநாடு தப்ப விட்டீர்கள் ? என்று கேட்டனர். அதற்கு இன்ஸ்பெக்டர் முருகன் முறையான பதில் கூறவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயபாலின் உறவினர்கள் மற்றும் குன்னலூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தி.மு.க மாவட்ட பிரதிநிதி அன்பழகன் தலைமையில் திருத்துறைப்பூண்டி – முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பாண்டி கடைத்தெருவில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதில் த.மா.கா.வை சேர்ந்த தினகரன், சிவகுமார், சந்திர சேகரன், காங்கிரசை சேர்ந்த இளங்கோவன், வடுகநாதன், சுப்பையன், ஊராட்சி மன்ற தலைவர் ஆடலரசன் உட்பட தி.மு.க, அ.தி.மு.க, இ.கம்யூனிஸ்ட், மா.கம்யூனிஸ்ட் உட்பட அனைத்து கட்சி பிரமுகர்கள் மறியலில் ஈடுப்பட்டனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு திருத்துறைப்பூண்டி டி.எஸ்.பி. கண்ணதாசன், முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், திருத்துறைப்பூண்டி தாசில்தார் தமிழ்மணி மற்றும் வருவாய் துறையினர் மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சவார்த்தை நடத்தினர். இதில் அதிகாரிகள், இந்த வழக்கு தொடர்பாக 10 தினங்களுக்குள் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்யப்படும் என்று உறுதி கூறி எழுதி கொடுத்தனர். அதன் பிறகு மறியலில் ஈடுப்பட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் திருத்துறைப்பூண்டி – முத்துப்பேட்டை வழித்தடத்தில் சுமார் 2 மணி நேரம் போக்கு வரத்து தடைப்பட்டது.
படம் செய்தி:
1. திருமணத்தின் போது பிரியதர்ஷினி மற்றும் கணவன் தமிழ்மணி எடுத்து கொண்ட புகைப்படம்.
3.4. முத்துப்பேட்டை அடுத்த பாண்டி கடைத்தெருவில் காவல் துறையை கண்டித்து மறியலில் ஈடுப்பட்ட கிராமமக்கள்.
2.7. பேச்சு வார்த்தை நடத்தும் போலீசார் மற்றும் அதிகாரிகள்.
9.6. டி.எஸ்.பி. கண்ணதாசனை பார்த்து வாக்கு வாதத்தில் ஈடுப்பட்ட பெண்ணில் தந்தை ஜெயபால்.
5. சாலை மறியலால் வாகனங்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையாக நின்றது.
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஜெயபால். இவரது மகள் பிரியதர்ஷினி(25). இவர் எம்.பி.ஏ. மற்றும் 3 பட்டப்படிப்புகள் முடித்துள்ளார். இவருக்கும் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த கரிக்காடு கிராமத்தைச் சேர்ந்த அரசு போக்கு வரத்து கழக தொ.மு.ச தலைவர் ஜெயராமன் மகன் தமிழ்மணி(30). (இவர் சிங்கப்பூரில் பணிப்புரிகிறார்) ஆகிய இருவருக்கும் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டு கடந்த 02.02.2015-ம் அன்று திருமணம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன் 10 நாள் கழித்து மணமகன் தமிழ்மணி சிங்கப்பூர் நாட்டுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் பிரியதர்ஷினி குன்னலூரில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார். சில நாட்களில் கணவன் தமிழ்மணிக்கு ஏற்கனவே பட்டுக்கோட்டையை அடுத்த முதல்சேரி கிராமத்தைச் சேர்ந்த சத்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து 2 குழந்தைகள் உள்ள தகவல் பிரியதர்ஷினிக்கு தெரிய வந்தது. இதனால் கடும் மன உலைச்சலில் பிரியதர்ஷினி காணப்பட்டார். இந்த நிலையில் கடந்த மே 01-ம் தேதி, முதல் மனைவி சத்யா, பிரியதர்ஷினிக்கு போன் செய்து மிரட்டி உள்ளார். இதனால் மன வேதனை அடைந்த பிரியதர்ஷினி அன்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பிரியதர்ஷினி தந்தை ஜெயபால் எடையூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் முருகன் சம்பவ இடத்திற்கு சென்று தற்கொலை செய்து கொண்ட பிரியதர்ஷினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் முதல் திருமணத்தை மறைத்து ஏமாற்றி மீண்டும் திருமணம் செய்தும் மற்றும் திருமணம் நடந்து 2 மாதத்தில் புது பெண் தற்கொலை செய்துக் கொண்டதால் மன்னார்குடி ஆர்.டி.ஓ செல்வசுரப்பி அன்றைய தினம் தற்கொலை செய்துக் கொண்ட பிரியதர்ஷினியின் உடலை பார்வையிட்டு உறவினரிடம் விசாரணை நடத்தினார். அதன் பிறகு இந்த வழக்கு தொடர்பாக ஏமாற்றி திருமணம் செய்த தமிழ்மணி மற்றும் பிரியதர்ஷினியை மிரட்டிய முதல் மனைவி சத்யா ஆகியோர் மீது இதுநாள் வரை காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் சென்ற வாரம் சிங்கப்பூரிலிருந்து வந்த தமிழ்மணியை விசாரணை செய்த போலீசார் அப்பொழுதும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் தமிழ்மணி சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். இதனால் அதிர்ப்தி அடைந்த பிரியதர்ஷினியின் தந்தை ஜெயபால் மற்றும் உறவினர்கள் நேற்று எடையூர் காவல் நிலையம் சென்று இன்ஸ்பெக்டர் முருகனிடம் ஏன் தமிழ்மணி மீது நடவடிக்கை எடுக்க வில்லை ? அவரை ஏன் வெளிநாடு தப்ப விட்டீர்கள் ? என்று கேட்டனர். அதற்கு இன்ஸ்பெக்டர் முருகன் முறையான பதில் கூறவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயபாலின் உறவினர்கள் மற்றும் குன்னலூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தி.மு.க மாவட்ட பிரதிநிதி அன்பழகன் தலைமையில் திருத்துறைப்பூண்டி – முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பாண்டி கடைத்தெருவில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதில் த.மா.கா.வை சேர்ந்த தினகரன், சிவகுமார், சந்திர சேகரன், காங்கிரசை சேர்ந்த இளங்கோவன், வடுகநாதன், சுப்பையன், ஊராட்சி மன்ற தலைவர் ஆடலரசன் உட்பட தி.மு.க, அ.தி.மு.க, இ.கம்யூனிஸ்ட், மா.கம்யூனிஸ்ட் உட்பட அனைத்து கட்சி பிரமுகர்கள் மறியலில் ஈடுப்பட்டனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு திருத்துறைப்பூண்டி டி.எஸ்.பி. கண்ணதாசன், முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், திருத்துறைப்பூண்டி தாசில்தார் தமிழ்மணி மற்றும் வருவாய் துறையினர் மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சவார்த்தை நடத்தினர். இதில் அதிகாரிகள், இந்த வழக்கு தொடர்பாக 10 தினங்களுக்குள் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்யப்படும் என்று உறுதி கூறி எழுதி கொடுத்தனர். அதன் பிறகு மறியலில் ஈடுப்பட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் திருத்துறைப்பூண்டி – முத்துப்பேட்டை வழித்தடத்தில் சுமார் 2 மணி நேரம் போக்கு வரத்து தடைப்பட்டது.
படம் செய்தி:
1. திருமணத்தின் போது பிரியதர்ஷினி மற்றும் கணவன் தமிழ்மணி எடுத்து கொண்ட புகைப்படம்.
3.4. முத்துப்பேட்டை அடுத்த பாண்டி கடைத்தெருவில் காவல் துறையை கண்டித்து மறியலில் ஈடுப்பட்ட கிராமமக்கள்.
2.7. பேச்சு வார்த்தை நடத்தும் போலீசார் மற்றும் அதிகாரிகள்.
9.6. டி.எஸ்.பி. கண்ணதாசனை பார்த்து வாக்கு வாதத்தில் ஈடுப்பட்ட பெண்ணில் தந்தை ஜெயபால்.
5. சாலை மறியலால் வாகனங்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையாக நின்றது.
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.