மதுக்கூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் மார்க்கப்பிரிவான இஸ்லாமிய பிரச்சாரப்பேரவை ( IPP ) சார்பாக நேற்று 16-05-2015 சனிக்கிழமை ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாநாட்டு குழுத்தலைவர் கபார் தலைமை வகித்தார். முஜிபுர் ரஹ்மான்,முகம்மது இலியாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காயல்பட்டிணம் தாவா சென்டர் மாணவிகள் சார்பாக நடத்தப்பட்ட இஸ்லாம் குறித்த கண்காட்சியினை மவ்லவி ரிபாய் ரஷாதி திறந்து வைத்தார். மேலும் அன்றைய தினம் நடைபெற்ற மருத்துவ முகாமில் இரத்த தானம், இரத்தம் கண்டறிதல் நடைபெற்றது. இதில் பலர் பங்கேற்றனர். முன்னதாக ஜபருல்லா வரவேற்புரை ஆற்றினார்.
இதையடுத்து இஸ்லாமிய மார்க்கம் குறித்து சொற்பொழிவு நடைபெற்றது. இதில் மவ்லவி முகம்மது மைதீன் உலவி, 'சின்ன சின்ன அமல்கள்' என்ற தலைப்பிலும், மவ்லவி ரிபாய் ரஷாதி, 'இறையச்சம்' என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.
இதையடுத்து மந்திரமா ? தந்திரமா ? என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஊட்டும் வகையில் மேஜிக் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருச்சியை சார்ந்த அகமது கலந்துகொண்டு நடத்தினார். இதன் பின்னர் மவ்லவி இக்பால் ஃபிர்தவ்ஸி 'மரண சிந்தனை' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர். தொடர்ந்து "காயல்பட்டிணம் தாவா சென்டர்" மாணவிகளின் இஸ்லாம் குறித்த சொற்பொழிவை வழங்கினார்கள்.
தொடர்ந்து சிறிது இடைவெளிக்கு பிறகு பெளசூல் ரஹ்மான், தீன் முகம்மது, அப்பாஸ், நஸாருதீன் ஆகியோர் முன்னிலையில் மவ்லவி அன்சார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி, 'இஸ்லாமிய குடும்பம்' என்ற தலைப்பிலும், மெளலவி அப்துல் மஜீது மஹ்ளர், 'பாவமன்னிப்பு' என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினர்கள்.
விழா முடிவில் ஃபவாஸ் நன்றி கூறினார். இம்மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டார்கள். பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை இஸ்லாமிய பிரச்சாரப்பேரவை ஏற்று நடத்தியது. இம்மாநாடு http://tmmkmadukkur.blogspot.in/, www.tmclive என்ற இணைய தளங்களில் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டன. மாநாட்டு பந்தலிலும் ஆங்காங்கே டி.வி மற்றும் அகன்ற திரை முலமாகவும் நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பபட்டது.
நன்றி: தமுமுக மதுக்கூர்
நிகழ்ச்சிக்கு மாநாட்டு குழுத்தலைவர் கபார் தலைமை வகித்தார். முஜிபுர் ரஹ்மான்,முகம்மது இலியாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காயல்பட்டிணம் தாவா சென்டர் மாணவிகள் சார்பாக நடத்தப்பட்ட இஸ்லாம் குறித்த கண்காட்சியினை மவ்லவி ரிபாய் ரஷாதி திறந்து வைத்தார். மேலும் அன்றைய தினம் நடைபெற்ற மருத்துவ முகாமில் இரத்த தானம், இரத்தம் கண்டறிதல் நடைபெற்றது. இதில் பலர் பங்கேற்றனர். முன்னதாக ஜபருல்லா வரவேற்புரை ஆற்றினார்.
இதையடுத்து இஸ்லாமிய மார்க்கம் குறித்து சொற்பொழிவு நடைபெற்றது. இதில் மவ்லவி முகம்மது மைதீன் உலவி, 'சின்ன சின்ன அமல்கள்' என்ற தலைப்பிலும், மவ்லவி ரிபாய் ரஷாதி, 'இறையச்சம்' என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.
இதையடுத்து மந்திரமா ? தந்திரமா ? என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஊட்டும் வகையில் மேஜிக் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருச்சியை சார்ந்த அகமது கலந்துகொண்டு நடத்தினார். இதன் பின்னர் மவ்லவி இக்பால் ஃபிர்தவ்ஸி 'மரண சிந்தனை' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர். தொடர்ந்து "காயல்பட்டிணம் தாவா சென்டர்" மாணவிகளின் இஸ்லாம் குறித்த சொற்பொழிவை வழங்கினார்கள்.
தொடர்ந்து சிறிது இடைவெளிக்கு பிறகு பெளசூல் ரஹ்மான், தீன் முகம்மது, அப்பாஸ், நஸாருதீன் ஆகியோர் முன்னிலையில் மவ்லவி அன்சார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி, 'இஸ்லாமிய குடும்பம்' என்ற தலைப்பிலும், மெளலவி அப்துல் மஜீது மஹ்ளர், 'பாவமன்னிப்பு' என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினர்கள்.
விழா முடிவில் ஃபவாஸ் நன்றி கூறினார். இம்மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டார்கள். பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை இஸ்லாமிய பிரச்சாரப்பேரவை ஏற்று நடத்தியது. இம்மாநாடு http://tmmkmadukkur.blogspot.in/, www.tmclive என்ற இணைய தளங்களில் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டன. மாநாட்டு பந்தலிலும் ஆங்காங்கே டி.வி மற்றும் அகன்ற திரை முலமாகவும் நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பபட்டது.
நன்றி: தமுமுக மதுக்கூர்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.