.

Pages

Friday, May 29, 2015

கடற்கரைத்தெரு அமீரக அமைப்பு நடத்திய கல்வி விழிப்புணர்வு மாநாடு !

கடற்கரைத்தெரு ஜமாஅத் மற்றும் அமீரக அமைப்பு இணைந்து நடத்தும் 4 ஆம் ஆண்டு கல்வி விழிப்புணர்வு மாநாடு இன்று [ 29-05-2015 ] மாலை கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கடற்கரைதெரு ஜமாத் கெளரவ ஆலோசகர் அக்பர் ஹாஜியா தலைமை வகித்தார். கடற்கரைதெரு ஜமாத் தலைவர் என்ஜீனியர் எம் அஹமது அலி, அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை காயிதே மில்லத் கல்லூரி பேராசிரியர் ஜே ஹாஜா கனி கல்வியின் அவசியம் குறித்து சிறப்புரை ஆற்றினார்.

முன்னதாக அதிரை பேரூராட்சி வார்டு உறுப்பினர் சேனா மூனா ஹாஜா முகைதீன் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்சிகள் அனைத்தையும் காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் செய்யது அஹமது கபீர் இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில்  +2, SSLC பொதுத்தேர்வில் அதிரை அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழா முடிவில் கடற்கரைத்தெருஅமீரக அமைப்பின் இணை செயலாளர் எம் அஹமது அன்சாரி நன்றி கூறினார்.

இதில் அதிரை அனைத்து ஜமாத் நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள், கல்வியாளர்கள், மஹல்லாவாசிகள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
 
 

2 comments:

  1. \\ இந்நிகழ்ச்சியில் +2, SSLC பொதுத்தேர்வில் அதிரை அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.\\

    மாநிளவில், மாவட்டத்தில், வட்டத்தில் தேர்வில் வெற்றிபெற்றவர்களை வரிசை படுத்துவார்கள்; அதனடிப்படையில் பரிசுகளை பெறுவது வழக்கம். ஊரில் 3 இடங்களை பெற்றவர்களை கொவ்ரவிக்கும் நேரத்தில் அந்த முஹல்லாவில் பள்ளியளவில் அதிகம் மதிப்பெண்கள் பெற்றவர்களை கொவ்ரவிப்பதன் மூலம் தெருவில் கல்வி வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்புண்டு.

    நடப்பாண்டு பாராளுமன்ற ஒருசில எம்பிக்கள் கிராமங்களை தத்தெடுத்தார்கள் அது எந்த லட்சணத்தில் உள்ளதென்பது யாருக்கும் தெரியாது ஆனால் அமீரக கடற்கரை அமைப்பினர் ஏழ்மையான மாணவர்களை தத்தெடுத்து அவர்களுக்கு கல்விக்கான உதவிகளை தொய்வின்றி செய்து வருவது பாராட்டக் கூடியது. அம்முஹல்லாவில் அரசு பள்ளியின் ஆண்டு விழா இவ்வமைப்பினேரே எடுத்து செய்தால் ஏழ்மை மாணவர்களை கல்வியில் ஊக்குவிப்பதாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை எனலாம். இன்ஷா அல்லாஹ், செய்து பாருங்களேன்!

    ReplyDelete
  2. ஹாஜா கனி நல்ல சொற்பொழிவு சிறப்பாக இருந்தது(GOOD SELECTION),நிகழ்சிகள் நன்றாக இருந்தது .ஜமாஅத் ,அமீரக அமைப்பு தங்கள் பகுதியில் உள்ள மெல்லப்படிக்கும் மாணவர்களுக்கு இரவு நேரபயிற்சி வகுப்பு தொடக்கப்பளியில் தினமும் ஏற்பாடுகள் செய்யலாம்.மாணவர்கள் இரவு நேரங்களில் படிக்க வழிமுறை கிடைக்கலாம் இன்ஷாஅல்லாஹ்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.