.

Pages

Friday, May 22, 2015

முத்துப்பேட்டை அருகே அரசு பேருந்து பயணிகள் நிழற்குடைக்குள் புகுந்து விபத்து !

முத்துப்பேட்டை அருகே பேருந்து நிலையத்துக்குள் புகுந்து அரசு பேருந்து விபத்து. குடிமகன் படுகாயம். டிரைவரின் சமார்த்தியதால் பயணிகள் உயிர் தப்பினர்.

முத்துப்பேட்டை அருகே சைக்கிளில் சென்ற குடிமகன் ஒருவர் சாலையின் குறுக்கே சென்றதால் அரசு பேருந்து ஒன்று நிலை தடுமாறி பேருந்து நிலையத்திற்குள் புகுந்து விபத்தானது. இதில் டிரைவரின் சமார்த்தியத்தால் பயணிகள் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை ஊரிலிருந்து வேளாங்கன்னிக்கு செல்லும் அரசு பேருந்து ஒன்று நேற்று மாலை 3 மணிக்கு பட்டுக்கோட்டையிலிருந்து முத்துப்பேட்டை நோக்கி செம்படவன் காடு அருகே சென்றுக் கொண்டிருந்த போது பேட்டை மாதா கோவில் தெருவை சேர்ந்த காளிமுத்து(60) என்பவர் கடும் குடிபோதையில் திடீரென்று சைக்கிளில் சாலையின் குறுக்கே சென்றார். இதனை கண்ட அரசு பேருந்து டிரைவர் அவர் மீது மோதாமல் இருக்க பிரேக் போட்டார். அப்பொழுது பேருந்து நிலைத்தடுமாறி சாலை ஓரம் உள்ள பேருந்து நிலையத்துக்குள் புகுந்தது. இதனை கண்ட பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அப்பொழுது பேருந்தை ஓட்டிய டிரைவர் ஆப்ரகாம் சுதாரித்து கொண்டு சமார்த்தியமாக பயணிகள் மீது மோதாமல் பேருந்து நிலையம் கட்டித்தின் மீது மோதி நிறுத்தினார். இதில் பேருந்து முன்புரம் முழுவதும் சேதமானது. இதில் சாலையின் குறுக்கே வந்த குடிமகன் காளிமுத்துக்கு பலத்து காயம் ஏற்பட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதில் மேலப்பிடாகை பயணி லூசியா(60) மற்றும் ஒரு சில பெண்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டு முத்துப்பேட்டை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றனர். இந்த விபத்தில் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பேருந்தை சமார்த்தியமாக இயக்கிய டிரைவர் ஆப்ரகானை பொதுமக்கள் பாராட்டினர். இது குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.