இன்று கால் இறுதி ஆட்டம் நடைபெற இருக்கிறது. இதில் திருச்சி பாலு கனகராஜ் மெம்மோரியல் அணியினரும், தஞ்சை அருள் அணியினரும் மோதினார்கள். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 1-0 என்ற கணக்கில் கோல் அடித்து திருச்சி பாலு கனகராஜ் மெம்மோரியல் அணியினர் வெற்றி பெற்றனர். இதில் தஞ்சை அருள் அணியினர் கடந்த முறை சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கம் போல் இன்றைய ஆட்டத்தின் அம்பயர்களாக வாசு தேவனும், ஷபா ஆகியோர் பணியாற்றினர். நிகழ்ச்சிகள் அனைத்தையும் வழக்கம் போல் அஹமது ஹாஜா இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார்.
இன்றைய ஆட்டத்தை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மைதானத்திற்கு திரளாக வருகை தந்து ரசித்தனர்.
நாளை நான்கு ஆட்டங்கள் நடைபெற இருக்கிறது. காலையிலும், மாலையிலும் தலா இரண்டு ஆட்டங்களை நடத்த நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். நாளை காலை 9 மணியளவில் பட்டுக்கோட்டை AVK அணியினரும், வடிவேல் மெம்மோரியல் புதுக்கோட்டை அணியினரும் முதல் ஆட்டத்தில் விளையாட இருப்பதாகவும், இரண்டாவது ஆட்டமாக பிரண்ட்ஸ் புட்பால் கிளப் புதுக்கோட்டை அணியினரும், காரைக்குடி பள்ளத்தூர் அணியினரும், விளையாட இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
affa need seprate play ground .affa is our home team adirai people should help the team affa player have edujual talent has .we should encourage our home team
ReplyDelete