தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள பரக்கலக்கோட்டை கிருஷ்ண புரத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சுப்பிரமணியன் ( வயது 53 ) விவசாயம் செய்து வருகிறார்.
இன்று மதியம் 2 மணியளவில் பட்டுக்கோட்டை முத்துப்பேட்டை சாலையில் சைக்கிளில் பலசரக்கு ஜாமானை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். பிள்ளையார் கோவில் மேற்புறம் அருகே சென்ற போது அதே திசையில் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சுப்பிரமணியன் மீது மோதியது. இதில் சுப்ரமணியனுக்கு தலை, காது, மூக்கில் பலத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்த அதிராம்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் சந்திர சேகரன், சிறப்பு உதவி ஆய்வாளர் ஆசைத்தம்பி உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் இந்த பகுதியினரிடேயே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
படம்: வாகன விபத்தில் பலியான விவசாயி சுப்பிரமணியன்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.