.

Pages

Friday, November 27, 2015

சாபூத்திரி விளையாட்டுடன் செக்கடி குளத்தில் உற்சாக குளியல் !

அதிரை பேரூராட்சியின் சார்பில் அதிரை அருகே உள்ள நசுவினி ஆற்றின் ஓடையிலிருந்து பம்பிங் மூலம் நீர் இறைத்து செக்கடி குளத்திற்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து வந்தடைந்த பம்பிங் நீரால் செக்கடி குளத்தின் நீர் மட்டம் உயர்ந்து தற்போது கடல் போல் காட்சியளிக்கிறது.

கடந்த சில நாட்களாக இந்த பகுதியை சேர்ந்தவர்கள் செக்கடி குளத்தில் உற்சாகமாக குளித்து மகிழ்வதில் அதிக ஆர்வம் காட்டுவதால் நாளுக்கு நாள் குளத்திற்கு குளிக்க வரும் கூட்டம் அதிகமாகிறது. தினமும் சராசரியாக 100 பேர் வரை குளித்து மகிழ்கின்றனர். குளத்தில் டைவ் அடித்து, நடுப்பகுதி வரை நீந்தியும் செல்கின்றனர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் இவர்களின் குளியல் செக்கடி குளம் நடை மேடையில் வாக்கிங் செல்வோரை சுண்டி இழுக்கிறது. நெஞ்சம் நெகிழும் மலரும் நினைவுகளை அசைபோடும் விதமாக 'சாபூத்திரி' விளையாட்டுடன் மனம் மகிழ்வுடன் குளிக்கும் ஒவ்வொருவரும் குளித்து முடித்தவுடன் வீட்டில் இருந்து ஸ்பெஷலாக சமைத்து எடுத்துவரும் காலை உணவுகளை குளத்தின் கரையில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகின்றனர்.

தினமும் செக்கடி குளத்தில் குளித்து வரும் கால்பந்தாட்ட பயிற்சியாளர் அன்வர் அலி அவர்கள் நம்மிடம் கூறுகையில்...
கடல் போல் காட்சியளிக்கும் செக்கடி குளத்தில் தினமும் காலை நேரத்தில் இந்த பகுதி நண்பர்களுடன் ஒன்றாக இணைந்து குளித்து வருகிறேன். குளத்தின் நீர் சுத்தமாக இருப்பதால் நீண்ட நேரம் குளிப்பதில் அதிக ஆர்வம் வருகிறது. குளத்தின் நடுப்பகுதி வரை நீந்தியும் செல்கிறேன். இதனால் உடல் ஆரோக்கியம் கிடைக்கிறது. குளத்தில் நீந்தி குளிப்பதை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

மேலும் குளித்து முடித்தவுடன் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து காலை பசியாற செய்கிறோம். மலேசியாவில் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய 'நாசிலிமாஹ்' என்ற உணவை நேற்று காலை சாப்பிட்டோம். நண்பர்கள் மத்தியில் இந்த உணவிற்கு கிடைத்த உற்சாக வரவேற்பை அடுத்து இன்று காலை நோன்பு கஞ்சியுடன் வடை சமூசா, இஞ்சி டீ ஆகியவற்றை சாப்பிட்டோம். நாளை காலை புரோட்டோ, மாட்டுக்கறி உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விருந்து உபசரிப்பில் 50 பேர் முதல் 60 பேர் வரை கலந்துகொள்கிறோம்' என்றார்.
 
 
  
 
 
 

7 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அல்லாஹ் நமக்கு கொடுத்த ரஹ்மத் இந்த மழையும், குளத்தில் உள்ள தண்ணீரும். நான் குளத்தில் குளிப்பதை தவறு என்று சொல்லவில்லை. குளியல் என்ற பெயரில் அரைநிர்வானத்துடன் இருபாலார் பலரும் பார்க்கும் பொதுவில் புகைபடமாக வெளியிடுவது மார்க்க வரம்புகள் மீரும் செயல்.

    ReplyDelete
  3. இவர்களின் குளியல் செக்கடி குளம் நடை மேடையில் வாக்கிங் செல்வோரை சுண்டி இழுக்கிறது. அருமை அருமை தொடரட்டும்...?

    குறிப்பு:காலையில் வாக்கிங் செல்வது பெண்கள்.

    சகோதரர் நூர் அவர்களே தாங்கள் எத்தனை முறை சுட்டிக்காட்டினாலும் அதிரை நியூஸ் இது போன்ற செய்திகளை நிறுத்தப்போவதில்லை,எதற்கு வீண் கமென்ட்.

    ReplyDelete
  4. இவர்களின் குளியல் செக்கடி குளம் நடை மேடையில் வாக்கிங் செல்வோரை சுண்டி இழுக்கிறது. அருமை அருமை தொடரட்டும்...?

    குறிப்பு:காலையில் வாக்கிங் செல்வது பெண்கள்.

    சகோதரர் நூர் அவர்களே தாங்கள் எத்தனை முறை சுட்டிக்காட்டினாலும் அதிரை நியூஸ் இது போன்ற செய்திகளை நிறுத்தப்போவதில்லை,எதற்கு வீண் கமென்ட்.

    ReplyDelete
  5. அதிரை நியூஸ் மேல் என்ன தவறு இருக்கிறது.அவர்களின் பதிவு ஊர் நிகழ்வாக தான் உள்ளது.புகைப்படங்களை குறைத்து இருக்கலாம்.

    ReplyDelete
  6. Aha rombo oorukku thevayana visayam.arai nirvaanathudan ippadi ninnu photo poduvadharkku badhilaagha.indha photovai bus standil cut out vaitthu irukkalaam.

    ReplyDelete
  7. Aaha super oorukku thevayaana visayam idhu.adirai news indha maathiry arai niravaana photovai poduvadharkku badhilaagha cut out vaitthu irukkalaam

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.