.

Pages

Tuesday, November 24, 2015

திருவாரூர்-காரைக்குடி அகல ரயில் பாதை பணி: வாருங்கள் கருத்து கேட்பில் பங்கெடுப்போம் !

நாம் வருடந்தோறும் பிப்ரவரி மாத  இறுதியில்   நாள் இதழை கண்டிப்பாக பார்ப்போம்  எதற்காக ?  எதாவது ஒரு வகையில் திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை  விரிவாக்க பணிக்காக ஏதேனும் Budget  போட்டுள்ளார்களா என்று ஆவலுடன் பார்ப்போம், ஆனால் அவ்வாறு budget Allocation ஏதும் இருக்காது.  இவ்வாறாக நமது வயதும் கடந்து விட்டது. வருமுன் காப்போம் என்ற மனப்பான்மை நம்மிடையே சற்று குறைவுதான். முன் ஏற்பாடுகளில் ஈடுபடுவதில்லை. ஒன்று சேர்ந்தால் இன்ஷா அல்லாஹ் நமக்கு வெற்றி நிச்சயம்.                                                                                                                                                
நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கீழ் காணும் இந்திய ரயில்வே பொது மக்களின் கருத்து கேட்கும் website ல் தங்களது கருத்துகளை பதியும்படி அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

ரயில்வே அமைச்சகம், 2016-17 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தாக்கல் செய்யவுள்ளது. இதற்காக பொது மக்கள் தங்களின் ஆலோசனைகளை ரயில்வே அமைச்சகத்தின் இணையதளத்தில் தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

புதிய நடைமுறையாக பொதுமக்களின் கருத்து கேட்பை கடந்தாண்டு முதல் பெற்று வருகிறது. அதாவது ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட் தாக்கல் செய்யும் முன், பொது மக்களின் ஆலோசனைகளைப் பெற தீர்மானித்துள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு தாக்கல் செய்யும் ரயில்வே பட்ஜெட் குறித்த ஆலோசனைகளை இந்திய ரயில்வே அமைச்சக இணையதளத்தில் மின்னஞ்சல் மூலம் பொது மக்கள் தெரிவிக்கலாம். அதற்கான பிரத்யேக மின்னஞ்சல் முகவரி ரயில்வே அமைச்சக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ரயில்வே பட்ஜெட் குறித்து ரயில்வே துறைக்கு ஆலோசனைகள் சொல்ல விரும்பும் பொதுமக்கள் http://indianrailways.gov.in/railwayboard/ என்ற இணையதள முகவரிக்குச் செல்ல வேண்டும். பின்பு, அதிலிருக்கும் Public Suggestions for forthcoming Railway Budget  2016 - 17 என்ற இணைப்பை "கிளிக்' செய்ய வேண்டும். அதில், ஆலோசனை கூற விரும்புவோர் தங்களது பெயர், இ-மெயில் முகவரி, செல்லிடப்பேசி எண், முகவரி, ஆகியவற்றை பதிவு செய்து தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் தெரிவிக்கலாம். பொது மக்களின் ஆலோசனைகளை ரயில்வே பட்ஜெட் தயாரிக்கும்போது ரயில்வே வாரியம் பரிசீலிக்கும்.

http://indianrailways.gov.in/railwayboard/  என்ற ரயில்வே இணையதள link ஐ முறையாக பயன்படுத்த தெரியவில்லை எனில் , மற்றவரது உதவியுடன் அவரவர் கருத்தகளை பதியும்படி கேட்டுக்கொள்கிறோம்.
       
இன்ஷா அல்லாஹ் , எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நமதூர் சகோதர்கள் டெல்லி சென்று மாண்புமிகு  ரயில்வே அமைச்சரை சந்தித்து நமது மேற்கண்ட கோரிகையை சமர்பிக்க முயற்சி எடுத்து வருகிறோம். இதற்கான ஏற்பாட்டை நமது தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்  மாண்புமிகு பரசுராமன் அவர்கள் செய்து தருவதாக நம்மிடம் கூறியுள்ளார்.

ஒன்றுபடுவோம் , நமது இலக்கை அடைவோம் !                                                                                                                  
'சமூக ஆர்வலர்' அப்துல் ரஜாக்
யுனைடட் பவுண்டேஷன்.

திருவாரூர்-காரைக்குடி அகல ரயில் பாதை பணியை துரிதபடுத்தும் முயற்சியில் பங்கெடுக்கும் விதமாக ரயில்வே இணையதள கருத்துக்கேட்பில் நமதூரை சேர்ந்த 'சமூக ஆர்வலர்' எம்.எஸ் ஷிஹாபுதீன் காக்கா அவர்கள்  தனது கருத்தை பதிந்துள்ளார். இணையதளத்தில் இவர் பதிந்துள்ள கருத்துரை தங்களின் பார்வைக்காக...

அதேபோல் அதிரை சேது ரோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் முஹம்மது அலி அவர்கள் ரயில்வே கருத்து கேட்பில் பதிந்துள்ள கருத்துரை

5 comments:

  1. DONE

    Your Feedback has been Registered With registration Id: RLY-1448369764574

    ReplyDelete
  2. Your Feedback has been Registered With registration Id: RLY-1448375652618 Submit Reset
    Your Feedback has been Registered With registration Id: RLY-1448376720287 Your Feedback has been Registered With registration Id: RLY-1448376909635
    Also post on Facebook

    ReplyDelete
  3. we have 3 registration 01. karikkudi-pa-thiruvarur, 02. thanjavur-pattukkottai,. 03. mannargudi-pattukkottai ..regiter feedback Your Feedback has been Registered With registration Id: RLY-1448375652618 Submit Reset
    Your Feedback has been Registered With registration Id: RLY-1448376720287 Your Feedback has been Registered With registration Id: RLY-1448376909635
    Also post on Facebook

    ReplyDelete
  4. Done:Your Feedback has been Registered With registration Id: RLY-1448381495735

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.