.

Pages

Sunday, December 11, 2016

அதிரையில் தொடரும் அட்டுழியம்: நள்ளிரவில் மீண்டும் கார் கண்ணாடி உடைப்பு ! மோப்ப நாய் உதவியுடன் தேடுதல் வேட்டை !

அதிராம்பட்டினம், டிச-11
அதிராம்பட்டினத்தில் வீட்டின் வாசல் முன்பு நிறுத்தி இருந்த வாகனம் மீது கல்லைப் போட்டு கண்ணாடிகள் உடைப்பு. மர்ம நபர்கள் நள்ளிரவில் 2 வது தடவையாக மீண்டும் அட்டுழியத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவை சேர்ந்த முஹம்மது என்பவருக்கு சொந்தமான தவேரா டி போர்டு வாகனத்தை வெற்றிக்கலைகாரத் தெருவை சேர்ந்த முகமது அலி ஓட்டிவருகிறார்.

இவர் நேற்று இரவு 10 மணியளவில் வழக்கம்போல் தனது வீட்டின் வாசல் முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு உறங்கச்சென்றார். இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சவாரி செல்வதற்காக வாகனத்தை எடுத்தபோது வாகனத்தின் முன்புற கண்ணாடி கல்லால் உடைத்து சேதப்படுத்தி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அதிராம்பட்டினம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அதிராம்பட்டினம் காட்டுப்பள்ளி தெருவை சேர்ந்த ரியாஸ் அகமது, அஜ்மல்கான், முஹம்மது புஹாரி, பஷீர் அகமது, கீழத்தெருவை சேர்ந்த ஷஃபாத் அகமது, ஹாஜா நகரை சேர்ந்த அப்துல் சமது ஆகிய 6 பேரின் வாகனங்கள் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கல்லைப்போட்டு சேதப்படுத்தியதில் வாகனங்களின் முகப்பு மற்றும் பின்புறமுள்ள கண்ணாடிகள் உடைந்தது. இதுகுறித்து அதிராம்பட்டினம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

தொடர் அட்டுழியத்தில் ஈடுபட்டு வரும் மர்ம நபர்களை கண்டு பிடிக்கும் வகையில் பட்டுக்கோட்டை ஏஎஸ்பி அரவிந்த்மேனன் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. அந்த மோப்ப நாய் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த காட்டுப்பள்ளித்தெரு பகுதிகளில் சற்று தூரம் ஓடி விட்டு மீண்டும் அதே பகுதிக்கு வந்தது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இப்பகுதியில் மீண்டும் 2 வது தடவையாக நடந்த இச்சம்பவத்தால் வாகனங்கள் வைத்திருக்கும் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். அதிராம்பட்டினம் பகுதிகளில் நள்ளிரவில் தொடர்ந்து அட்டுழியத்தில் ஈடுபட்டுவரும் மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
 
 
 
 
 
 

2 comments:

  1. இதற்கு காரணமான கயவர்களை கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த கயவர்களிடம் இருந்தே இழப்பீட்டை பெற்றுத் தரவேண்டும் அந்த ஈனபிறவிகளுக்கு தகுந்த தண்டனையும் வழங்கவேண்டும்!

    ReplyDelete
  2. கயவர்களை போலிஸ் விரைவில் பிடிக்குமா?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.