தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ( TNTJ ) அமீரகம் - அதிராம்பட்டினம் கிளைகளின் ஒருங்கிணைந்த ஆலோசனைக்கூட்டம் துபாய் JT மர்க்கசில் வெள்ளிக்கிழமை மதியம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கிளைப் பொறுப்பாளர் அயூப்கான் தலைமை வகித்தார். இதில் அதிரையில் ஆற்றிவரும் இஸ்லாமிய தாவா பணிகள் மற்றும் அதிராம்பட்டினம் தவ்ஹீத் பள்ளிவாசல் மற்றும் மஸ்ஜீத் தவ்பா கட்டுமானப் பணிக்கான நிதி தேவை குறித்தும், அவற்றை திரட்டுவது குறித்து விவாதித்தனர். அதிரையில் தவ்ஹீத் ஜமாஅத் கிளை- 1, கிளை- 2 சார்பில் இஸ்லாமிய தாவா பணிகளை அதிகப்படுத்துவது குறித்து பேசப்பட்டன.
கூட்ட முடிவில் இஷாக் அவர்களின் இஸ்லாமிய சிறப்பு சொற்பொழிவு நடந்தது. இக்கூட்டத்தில் அபூதாபி, துபாய் உட்பட அமீரக வாழ் அதிரை தவ்ஹீத் ஜமாத்தினர் பலர் கலந்துகொண்டனர்.
மாஷா அல்லாஹ்
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ReplyDelete