அதிரை நியூஸ்: ஓமன், டிச-10
ஓமனில் பணிநிமித்தம் சென்றுள்ள பன்னாட்டு தொழிலாளர்களில் ஒரு பகுதியினர் பல்வேறு காரணங்களால் தங்களுக்கு வேலை வழங்கிய முதலாளிகளை விட்டும் வெளியேறி பிற இடங்களில் வேலைவாய்ப்புக்களை சட்டவிரோதமாக தேடிக்கொள்கின்றனர், இதில் நியாயமான காரணம் இருப்பதைப்போலவே அநியாயமான காரணங்களும் உண்டு. இவர்களில் பலரை ஒமன் தலைநகர் மஸ்கட் மாநகரின் முத்ராஹ் பிரதேச ஹம்ரியா பகுதியில் அதிகாலை 5 மணிமுதல் அன்றாட தற்காலிக (அத்த கூலி) வேலைவாய்ப்புக்களுக்காக வரிசையில் காத்திருப்பதை காணலாம்.
இப்படி தங்களின் கம்பெனிகளை, முதலாளிகளை விட்டும் வெளியேறியோர் சுமார் 60,000 பேர் எனவும் இவர்களில் பெரும்பான்மையினர் பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து வந்தவர்கள் எனவும் ஓமானிய அரசின் வேலைவாய்ப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது பல வளைகுடா நாடுகளிலிலும் நிலவும் பொருளாதார பிரச்சனைகளின் காரணமாக வேலைவாய்ப்பிலும் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதால் கடந்த சுமார் 4 மாதங்களாக சட்டவிரோதமாக வெளியில் வேலைபார்ப்போருக்கான வேலைவாய்ப்புகள் குறைந்து போதிய வருமானமின்றி திண்டாடி வருவதால் பலரும் நாட்டை விட்டு வெளியேற முயல்கின்றனர் ஆனால் முறையாக வெளியேற வேண்டுமானால் பலவித அபராதங்களையும் செலுத்தினால் மட்டுமே முடியும் இல்லையேல் பொதுமன்னிப்பு ஒன்றே வழி.
சட்டவிரோத தொழிலாளி ஒருவர் ஓமனை விட்டு வெளியேற வேண்டுமானால் விமான நிலையத்தில் விசா கட்டணமாக 20 ரியால், சட்டவிரோதமாக தங்கியிருந்த ஒவ்வொரு மாதத்திற்கும் 19 ரியால்கள் என வேலைவாய்ப்புத்துறை அமைச்சகத்திற்கும், ஓடிப்போனதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளவர்கள் அதிலிருந்து விடுபட 400 ரியால்களையும் அபராதமாக செலுத்த வேண்டும் என்றாலும் தற்போதைய சூழ்நிலையில் இத்தகைய தொழிலாளர்களால் இந்த அபராதங்கள் செலுத்த முடியாதவை என்பதால் அவர்கள் ஓமன் அரசின் கருணையை எதிர்பார்த்துள்ளனர்.
இதற்கு முன் 2005, 2007 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது போல் இந்த ஆண்டும் பொதுமன்னிப்பு வழங்கப்படுமா என வினவப்பட்டபோது 'இன்றைய நிலையில் அப்படி ஒரு திட்டமே அரசிற்கு இல்லை' என வேலைவாய்ப்புத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 19,000 சட்டவிரோத தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேற விண்ணப்பித்திருந்ததாகவும் அவர்களில் பலர் சட்ட நடவடிக்கைகளுக்கு பின் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இன்னொருபுறம் சட்டவிரோத தொழிலாளர்களை கைது செய்யும் அதிரடி சோதனை நடவடிக்கைகளும் தொடர்கின்றன.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
ஓமனில் பணிநிமித்தம் சென்றுள்ள பன்னாட்டு தொழிலாளர்களில் ஒரு பகுதியினர் பல்வேறு காரணங்களால் தங்களுக்கு வேலை வழங்கிய முதலாளிகளை விட்டும் வெளியேறி பிற இடங்களில் வேலைவாய்ப்புக்களை சட்டவிரோதமாக தேடிக்கொள்கின்றனர், இதில் நியாயமான காரணம் இருப்பதைப்போலவே அநியாயமான காரணங்களும் உண்டு. இவர்களில் பலரை ஒமன் தலைநகர் மஸ்கட் மாநகரின் முத்ராஹ் பிரதேச ஹம்ரியா பகுதியில் அதிகாலை 5 மணிமுதல் அன்றாட தற்காலிக (அத்த கூலி) வேலைவாய்ப்புக்களுக்காக வரிசையில் காத்திருப்பதை காணலாம்.
இப்படி தங்களின் கம்பெனிகளை, முதலாளிகளை விட்டும் வெளியேறியோர் சுமார் 60,000 பேர் எனவும் இவர்களில் பெரும்பான்மையினர் பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து வந்தவர்கள் எனவும் ஓமானிய அரசின் வேலைவாய்ப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது பல வளைகுடா நாடுகளிலிலும் நிலவும் பொருளாதார பிரச்சனைகளின் காரணமாக வேலைவாய்ப்பிலும் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதால் கடந்த சுமார் 4 மாதங்களாக சட்டவிரோதமாக வெளியில் வேலைபார்ப்போருக்கான வேலைவாய்ப்புகள் குறைந்து போதிய வருமானமின்றி திண்டாடி வருவதால் பலரும் நாட்டை விட்டு வெளியேற முயல்கின்றனர் ஆனால் முறையாக வெளியேற வேண்டுமானால் பலவித அபராதங்களையும் செலுத்தினால் மட்டுமே முடியும் இல்லையேல் பொதுமன்னிப்பு ஒன்றே வழி.
சட்டவிரோத தொழிலாளி ஒருவர் ஓமனை விட்டு வெளியேற வேண்டுமானால் விமான நிலையத்தில் விசா கட்டணமாக 20 ரியால், சட்டவிரோதமாக தங்கியிருந்த ஒவ்வொரு மாதத்திற்கும் 19 ரியால்கள் என வேலைவாய்ப்புத்துறை அமைச்சகத்திற்கும், ஓடிப்போனதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளவர்கள் அதிலிருந்து விடுபட 400 ரியால்களையும் அபராதமாக செலுத்த வேண்டும் என்றாலும் தற்போதைய சூழ்நிலையில் இத்தகைய தொழிலாளர்களால் இந்த அபராதங்கள் செலுத்த முடியாதவை என்பதால் அவர்கள் ஓமன் அரசின் கருணையை எதிர்பார்த்துள்ளனர்.
இதற்கு முன் 2005, 2007 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது போல் இந்த ஆண்டும் பொதுமன்னிப்பு வழங்கப்படுமா என வினவப்பட்டபோது 'இன்றைய நிலையில் அப்படி ஒரு திட்டமே அரசிற்கு இல்லை' என வேலைவாய்ப்புத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 19,000 சட்டவிரோத தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேற விண்ணப்பித்திருந்ததாகவும் அவர்களில் பலர் சட்ட நடவடிக்கைகளுக்கு பின் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இன்னொருபுறம் சட்டவிரோத தொழிலாளர்களை கைது செய்யும் அதிரடி சோதனை நடவடிக்கைகளும் தொடர்கின்றன.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.