.

Pages

Friday, December 9, 2016

அதிரையில் நள்ளிரவில் வாகனங்களில் கண்ணாடி உடைப்பு: மர்ம நபர்கள் அட்டுழியம் !

அதிராம்பட்டினம், டிச-09
அதிராம்பட்டினத்தில் வீட்டின் வாசல் முன்பு நிறுத்தி இருந்த வாகனங்கள் மீது காங்கிரட் கல்லைப் போட்டு கண்ணாடிகள் உடைப்பு. மர்ம நபர்கள் நள்ளிரவில் அட்டுழியத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காட்டுப்பள்ளித் தெருவை சேர்ந்தவர்கள் ரியாஸ் அகமது, அஜ்மல்கான், முஹம்மது புஹாரி, பஷீர் அகமது. இவர்கள் அனைவரும் அருகே அருகே வசித்து வருகின்றனர். கீழத்தெருவை சேர்ந்தவர் ஷஃபாத் அகமது, ஹாஜா நகரை சேர்ந்தவர் அப்துல் சமது. இவர்கள் 6 பேரும் தங்களுக்கு சொந்தமான வாகனங்களை வழக்கம்போல் அவரவர் வீட்டின் வாசல் முன்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வாகனங்கள் மீது காங்கிரட் கல்லைப்போட்டு சேதப்படுத்தி உள்ளனர். இதில் ஆட்டோ, அம்பாஸ்டர் கார், மாருதி கார், ஆமினி வேன் உட்பட 6 வாகனங்களின் முகப்பு மற்றும் பின்புறமுள்ள கண்ணாடிகள் உடைந்து சேதமாகியது. இதுகுறித்து அதிராம்பட்டினம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவத்தால் வாகனங்கள் வைத்திருக்கும் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். அதிராம்பட்டினம் பகுதிகளில் நள்ளிரவில் அட்டுழியத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 

3 comments:

  1. ஒவ்வொரு முக்கியமான பகுதியில் CCTV கேமரா பொருத்தவேண்டும். காவல்துறைக்கே காவல் தேவைப்படும் போது காருக்கு எப்படி கிடைக்கும. நம்மவூரு முக்கியஸ்தர்கள் எல்லாம் அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை பண்ணினார்கள் விளைவு இதுதானா? அதில் சமூக ஆர்வலர்கள் சில யோசனை வைத்தார்களே., அதன் மீது கவனம் செலுத்தினார்களா?பிரச்னை வரும்போது கொடுக்கிறோம்; தீர்ந்த பிறகு மறக்கிறோம். மறதியே காரணம்.

    ReplyDelete
  2. இதை யாரு செய்தார்கள் என்று கண்டு பிடுத்து ஆக வேண்டும் .
    இவளோ தைரியமாக செய்தவர்கள் நாளை எது வேண்ணா செய்யலாம்
    இவர்களை சும்மா விட கூடாது ,ஏன் இந்த செயல் என்று தெரிய வேண்டும்.

    முடித்த வரை வீடுகளில் கேமரா பொருத்துங்கள் ,கூர்க்கா நியமன செய்ய
    முயற்சிகள் எடுப்போம்.

    ReplyDelete
  3. இந்த கண்ணாடி உடைப்புக்கு பின்னால் அரசியல் இருப்பதுபோல் தோனுகிறது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.