.

Pages

Saturday, December 10, 2016

குவைத்தில் கண்டெடுத்த பணத்தை நேர்மையாக ஒப்படைத்தவர் கௌரவிப்பு !

அதிரை நியூஸ்:குவைத், டிச-10
நேர்மையாளர்கள் இன்னும் உலகிலிருந்து அற்றுப்போகவில்லை என்பதை அடிக்கடி பல சம்பவங்கள் நிரூபித்து வருகின்றன, அப்படியொரு சம்பவம் குவைத்திலும் நடந்துள்ளது.

குவைத்தில் செயல்படும் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பாதுகாவலராக பணியாற்றுபவர் ஜூதா ஜமால் அப்துஸ் ஸலாம் என்ற வெளிநாட்டவர், யாரோ ஒருவர் தவறுதலாக விட்டுச் சென்ற ஒரு பையை கண்டெடுக்கின்றார் அதில் 6,600 குவைத் தினாரும் 3,000 அமெரிக்க டாலரும் இருந்துள்ளது. இது அவர் பெற்று வந்த மாதாந்திர சம்பளமான 100 தினாரை விட 75 மடங்கு கூடுதலானது.

சிறிது நேரம் பணத்தை தவறவிட்டவருக்காக காத்திருந்தவர் யாரும் வராததால் உடனடியாக தனது ரியல் எஸ்டேட் அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். சுமார் 2 மணி நேரம் கழித்து பணத்தை தவறவிட்டவர் தேடிவந்து பெற்றுச் சென்றார்.

ஜூதா ஜமால் பணத்தை தனது அலுவலகத்தில் ஒப்படைக்கும் போது அவரது மேலதிகாரி, நீ பணத்தை எடுக்கும் போது யாரும் பார்க்கவில்லையா? ஏன வினவ, 'நிச்சயமாக என்னை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருந்தான்' என பதிலளிக்க, அவரது பதிலாலும் நேர்மையாலும் ஈர்க்கப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனம் சிறப்பு நிகழ்ச்சி மூலம் பாராட்டுகளையும், பரிசுகளையும் வழங்கி கௌரவித்துள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

2 comments:

  1. இவரைப்போல் பல நல்ல மனிதர்கள் இருப்பதனால்தான் உலகம் இன்னும் அழியாமல் இருக்கிறது

    ReplyDelete

  2. இவரைப்போல் பல நல்ல மனிதர்கள் இருப்பதனால்தான் உலகம் இன்னும் அழியாமல் இருக்கிறது.....

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.