.

Pages

Saturday, December 10, 2016

சவுதி – பஹ்ரைன் இடையே புதிய கடற்பாலம் !

அதிரை நியூஸ்: சவூதி, டிச-10
சவுதி – பஹ்ரைன் இடையே 'கிங் பஹத் காஸ்வே' (King Fahd Causeway) என்ற பெயரில் 25 கி.மீ தூர கடற்பாலம் 1986 ஆம் ஆண்டு கட்டப்பட்டு நவம்பர் 26 ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்தப் பாலத்தில் சராசரியாக நாளொன்றுக்கு இருபுறமுமாக 40,000 வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்நிலையில், 'கிங் ஹமாத் காஸ்வே' (King Hamad Causeway) என்ற பெயரில் புதிய கடற்பாலம் ஒன்றை நிர்மானித்திட ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த புதிய கடற்பாலத்தை தனியார் நிறுவனங்கள் கட்டவுள்ளன.

இந்த கடற்பாலத்தையொட்டியே, GCC Railway Network எனப்படும் வளைகுடா அரபுநாடுகளை ஒன்றிணைக்கும் 2,170 கி.மீ. தூரத்திற்கான ரயில்வே திட்டத்தின் கீழ் ரயில்வே கடற்பாலமும் கூடுதலாக அமையவுள்ளது. இந்த புதிய திட்டங்கள் இன்னும் 4 ஆண்டுகளில் நிறைவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.