.

Pages

Monday, February 13, 2017

இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி ஆண்டுவிழாவில் அரசுப்பொதுத்தேர்வு சாதனையாளர்களுக்கு தங்க நாணயங்கள் பரிசு வழங்கி கெளரவிப்பு !

அதிராம்பட்டினம், பிப்-13
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் 43 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவில் பள்ளித் தாளாளர் ஹாஜி எம்.எஸ் தாஜுதீன் தலைமை வகித்தார். 
பள்ளி நிர்வாகப் பொருளாளர் ஹாஜி ஏ. அஹமது இப்ராஹீம் முன்னிலை வகித்தார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சென்னை ஸ்கில்ஸ்குருகூல் நிறுவனரும், தொழில் வழிகாட்டி பயிற்சியாளருமாகிய வித்யா ரகு ஆண்டு விழா உரை நிகழ்த்தினார். இதில் கல்வியின் அவசியம் மற்றும் தன்னம்பிக்கை, விடாமுயற்சி பற்றி விளக்கிப் பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 தலைவர் விவேகானந்தம் கலந்துகொண்டு பொதுசுகாதாரத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பு - கடமைகள் குறித்து விளக்கிப் பேசினார்.

விழாவில் கல்வியில், விளையாட்டில் சாதனை நிகழ்த்திய பள்ளி மாணவ மாணவிகளுக்கு, ஆசிரியைகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பரிசினை பள்ளி நிர்வாகப் பொருளாளர் ஹாஜி ஏ. அஹமது இப்ராஹீம், பள்ளி முன்னாள் இயக்குனர் பேராசிரியர் எம்.ஏ முஹம்மது அப்துல் காதர், பெறோர் ஆசிரியர் கழகப் பொறுப்பாளர்கள் ஓ.கே.எம் சிபஹத்துல்லா, எஸ்.ஏ அப்துல் ஹமீது, முஹம்மது சலீம் ஆகியோர் வழங்கினர்.

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு  அரசுப் பொதுத் தேர்வில் பள்ளி அளவில் சாதனை நிகழ்த்திய முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் தலா 1 கிராம் வீதம் 6 தங்க நாணயங்கள் பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் சார்பில் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

பின்னர் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை அறிவுத்திறன் நிகழ்ச்சி நடந்தது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களின் தனித்திறமையை நிருபித்தனர்.

தொடக்கத்தில் பள்ளி இயக்குனர் ரேவதி விருத்தினர் அறிமுக உரை நிகழ்த்தினார். பள்ளி முதல்வர் மீனா குமாரி வரவேற்று ஆண்டறிக்கை
வாசித்தார். பள்ளியின் சார்பில் கல்வியில் மாணவிகள் - ஆசிரியைகள் நிகழ்த்திய பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டார். மேலும் பள்ளியின் சார்பில் நடத்தப்பட்ட சமூக விழிப்புணர்வு பணிகளையும் குறிப்பிட்டு பேசினார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் பள்ளி ஆசிரியை ஜெயப்பிரியா தொகுத்து வழங்கினார். விழா முடிவில் தமிழாசிரியர் பார்த்தசாரதி நன்றி கூறினார்.

இந்த விழாவில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள், ஊர் பிரமுகர்கள், முன்னாள் ஆசிரியர்கள் -பள்ளி அலுவலக பணியாளர்கள் - பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.