தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் பேரூராட்சி, தெற்கு மேட்டுத் தெருவில் ஜல்லிக்கட்டினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.மகேஷ் அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் இன்று (14.02.2017) கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஜல்லிகட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் தெற்கு கிராமத்தில் தமிழர்களின் பாரம்பரியான விளையாட்டான ஜல்லிக்கட்டு விழா நடைபெற்று வருகிறது. இதில் 380 காளைகளும், 400 காளை பிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். ஜல்லிக்கட்டு காளையினை முறையாக கால்நடைத்துறை மூலம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தகுதியுடைய காளைகள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றது. கால்நடைத்துறையின் மூலம் காளைகளுக்கு தனியாக ஆம்புலென்ஸ் வசதி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
வீரர்களுக்கு மருத்துவத் துறையின் மூலம் முறையான பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர். பாதுகாப்பு பணிகளில் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். மாலை 3 மணிக்கு இப்போட்டியானது நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உச்ச நீதி மன்ற வழிகாட்டுதலின்படி அனைத்து முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்தார்.
இவ்விழாவில் போது வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், கால்நடைத்துறை இணை இயக்குநர் மாசிலாமணி, முன்னாள் பேரூராட்சி தலைவர் சிங் ஜெகதீசன், வட்டாட்சியர் குருமூர்த்தி மற்றும் ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜல்லிகட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் தெற்கு கிராமத்தில் தமிழர்களின் பாரம்பரியான விளையாட்டான ஜல்லிக்கட்டு விழா நடைபெற்று வருகிறது. இதில் 380 காளைகளும், 400 காளை பிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். ஜல்லிக்கட்டு காளையினை முறையாக கால்நடைத்துறை மூலம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தகுதியுடைய காளைகள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றது. கால்நடைத்துறையின் மூலம் காளைகளுக்கு தனியாக ஆம்புலென்ஸ் வசதி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
வீரர்களுக்கு மருத்துவத் துறையின் மூலம் முறையான பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர். பாதுகாப்பு பணிகளில் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். மாலை 3 மணிக்கு இப்போட்டியானது நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உச்ச நீதி மன்ற வழிகாட்டுதலின்படி அனைத்து முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்தார்.
இவ்விழாவில் போது வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், கால்நடைத்துறை இணை இயக்குநர் மாசிலாமணி, முன்னாள் பேரூராட்சி தலைவர் சிங் ஜெகதீசன், வட்டாட்சியர் குருமூர்த்தி மற்றும் ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.