அதிராம்பட்டினம், ஏப்-30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், மானுட நல மையம் சார்பில், 'அமைதியை நோக்கி' எனும் தலைப்பில் 3 நாள் வாழ்வியல் கண்காட்சி அதிராம்பட்டினம், சேர்மன் வாடி, பழைய தனலட்சுமி வங்கி வளாகத்தில் சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இக்கண்காட்சியில் நவீன விஞ்ஞானம், மனித படைப்பு, குழந்தை வளர்ப்பு, குடும்பவியல், பெண்ணுரிமை, மரணத்திற்குப் பின், புத்தக அரங்கம், வீடியோ அரங்கம் ஆகியன குறித்து காட்சி விளக்கங்கள் மூலம் பார்வையாளர்களுக்கு விளக்கி கூறப்பட்டது. மேலும் ஒளித்திரை காட்சி மூலம் விளக்கி கூறப்பட்டன. கண்காட்சி அரங்கில் 150 தலைப்புகளில் 1000 க்கும் மேற்பட்ட நூல்கள் இடம்பெற்றுள்ளன.
கண்காட்சி அரங்கில் இலவச பல் மருத்துவ முகாம் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இலவச பொது மருத்துவ முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் டாக்டர் ஏ. அன்பழகன், மருத்துவர்கள் எஸ்.ஹாஜா முகைதீன், ஏ.சீனிவாசன், எஸ்.கார்த்திகேயன், டி.சுதாகரன் ஆகியோர் கலந்துகொண்டு மருத்துவ ஆலோசனை வழங்கினார்கள். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். கண்காட்சி தினமும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்று வருகிறது. நிறைவு நாளான நாளை மே.1 ந் தேதி திங்கட்கிழமை பெண்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் பிரத்தியோக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கண்காட்சி துளிகள்:
1. கண்ணைக்கவரும் கருவியல், வியக்க வைக்கும் விஞ்ஞானம், ஆராயத் தூண்டும் ஆன்மிகம், நலமுடன் வாழ நற்போதனைகள் உட்பட 90 வகை காட்சி விளக்கங்கள் அடங்கிய பிளக்ஸ் பதாகைகள் அரங்கில் இடம்பெற்றன.
2. 'அமைதியை நோக்கி' பிரச்சாரக்குழுவினர் 15 பேர் பார்வையாளர்களுக்கு காட்சி படங்களுடன் விளக்கி கூறினர்.
3. பார்வையாளர்களுக்கு திருக்குர் ஆன் தமிழாக்கம் உட்பட 8 வகை நூல்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன.
4. வெயில் தாகத்தை தணிக்க இலவச மோர் / குளிர் பானங்கள் வழங்கப்பட்டன.
5. வாழ்வியல் குறித்து பார்வையாளர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
6. கண்காட்சி குறித்து பார்வையாளர்களுக்கு கருத்துப்படிவம் வழங்கப்பட்டு கருத்துரைகள் பெறப்பட்டன.
7. பார்வையாளர்களை கண்காட்சி குழுவினர் அரங்கின் முகப்பில் நின்றவாறு வரவேற்று மகிழ்ந்தனர்.
8. கண்காட்சி அரங்கு சுமார் 5000 சதுர அடியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு இருந்தது.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், மானுட நல மையம் சார்பில், 'அமைதியை நோக்கி' எனும் தலைப்பில் 3 நாள் வாழ்வியல் கண்காட்சி அதிராம்பட்டினம், சேர்மன் வாடி, பழைய தனலட்சுமி வங்கி வளாகத்தில் சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இக்கண்காட்சியில் நவீன விஞ்ஞானம், மனித படைப்பு, குழந்தை வளர்ப்பு, குடும்பவியல், பெண்ணுரிமை, மரணத்திற்குப் பின், புத்தக அரங்கம், வீடியோ அரங்கம் ஆகியன குறித்து காட்சி விளக்கங்கள் மூலம் பார்வையாளர்களுக்கு விளக்கி கூறப்பட்டது. மேலும் ஒளித்திரை காட்சி மூலம் விளக்கி கூறப்பட்டன. கண்காட்சி அரங்கில் 150 தலைப்புகளில் 1000 க்கும் மேற்பட்ட நூல்கள் இடம்பெற்றுள்ளன.
கண்காட்சி அரங்கில் இலவச பல் மருத்துவ முகாம் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இலவச பொது மருத்துவ முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் டாக்டர் ஏ. அன்பழகன், மருத்துவர்கள் எஸ்.ஹாஜா முகைதீன், ஏ.சீனிவாசன், எஸ்.கார்த்திகேயன், டி.சுதாகரன் ஆகியோர் கலந்துகொண்டு மருத்துவ ஆலோசனை வழங்கினார்கள். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். கண்காட்சி தினமும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்று வருகிறது. நிறைவு நாளான நாளை மே.1 ந் தேதி திங்கட்கிழமை பெண்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் பிரத்தியோக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கண்காட்சி துளிகள்:
1. கண்ணைக்கவரும் கருவியல், வியக்க வைக்கும் விஞ்ஞானம், ஆராயத் தூண்டும் ஆன்மிகம், நலமுடன் வாழ நற்போதனைகள் உட்பட 90 வகை காட்சி விளக்கங்கள் அடங்கிய பிளக்ஸ் பதாகைகள் அரங்கில் இடம்பெற்றன.
2. 'அமைதியை நோக்கி' பிரச்சாரக்குழுவினர் 15 பேர் பார்வையாளர்களுக்கு காட்சி படங்களுடன் விளக்கி கூறினர்.
3. பார்வையாளர்களுக்கு திருக்குர் ஆன் தமிழாக்கம் உட்பட 8 வகை நூல்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன.
4. வெயில் தாகத்தை தணிக்க இலவச மோர் / குளிர் பானங்கள் வழங்கப்பட்டன.
5. வாழ்வியல் குறித்து பார்வையாளர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
6. கண்காட்சி குறித்து பார்வையாளர்களுக்கு கருத்துப்படிவம் வழங்கப்பட்டு கருத்துரைகள் பெறப்பட்டன.
7. பார்வையாளர்களை கண்காட்சி குழுவினர் அரங்கின் முகப்பில் நின்றவாறு வரவேற்று மகிழ்ந்தனர்.
8. கண்காட்சி அரங்கு சுமார் 5000 சதுர அடியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு இருந்தது.