.

Pages

Sunday, April 16, 2017

காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ( படங்கள் )

அதிராம்பட்டினம், ஏப்-16
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் கடந்த 1993 - 1996 ஆம் ஆண்டு கல்வியாண்டில் கணினி அறிவியல் பாடப் பிரிவில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்களின் நெஞ்சம் நெகிழும் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி கணினி அறிவியல் துறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி கணினி அறிவியல் துறைத் தலைவர் என். ஜெயவீரன், பேராசிரியர்கள் சேக் அப்துல் காதர், ஹாஜா அப்துல் காதர், அலுவலக பணியாளர் ரவி ஆகியோர் முன்னாள் மாணவர்களை வரவேற்றனர்.

சந்திப்பில் முன்னாள் மாணவர்கள் பேராசிரியர் சீனிவாசன், பேராசிரியர் திருநாவுக்கரசு, எம்.என் முஹம்மது சலீம், எம். நிஜாமுதீன், ஏ.ஜே சகாபுதீன், என். முஹம்மது சலீம், செந்தில் ஆகியோர் கலந்துகொண்டு தங்களைப் பற்றிய அறிமுகத்தையும், தங்களது பணிகள் குறித்தும், கல்லூரி காலங்களில் நிகழ்ந்த மலரும் நினைவுகள் குறித்து பேசி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தனர்.

21 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் மாணவர்கள் பரஸ்பரம் நலம் விசாரிப்புடன் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி கல்லூரி காலங்களில் நிகழ்ந்த மலரும் நினைவுகளை மகிழ்ச்சியுடன் அசைபோட்டனர்.

இந்த சந்திப்பு நிகழ்ச்சியை இனி வருடந்தோறும் தொடர்ந்து நடத்த வேண்டுமென, முன்னாள் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் ஒருமித்த கருத்தாகவும், விருப்பமாகவும் இருந்தது. சந்திப்பு ஏற்பாட்டினை முன்னாள் மாணவர்கள் பேராசிரியர் சீனிவாசன், எம்.என் முகமது சலீம் செய்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.