தஞ்சாவூர் மாவட்ட பொது மக்கள் வெப்ப அலையிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றி தங்களை காத்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் இன்று (18.04.2017) தகவல் தெரிவித்துள்ளார்கள்.
இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;
வெப்பஅலை விபரம் குறித்த செய்திகளை ரேடியோ, தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் ஆகியவற்றை அன்றாடம் கவனித்து அறிந்து கொள்ள வேண்டும். கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட வேண்டும். மக்கள் கூடும் பொது இடங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க தொடர்புடைய, அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாகம் இல்லை என்றால் கூட போதுமான அளவு தண்ணீர் முடிந்த வரை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும். தளர்வான மற்றும் நுண்ணிய பருத்தி ஆடைகள், பாதுகாப்பு கண்ணாடிகள், குடை, தொப்பி, காலணிகள் போன்றவற்றை சூரிய வெப்பத்தில் வெளியே செல்லும் போது பயன்படுத்த வேண்டும். பயணங்கள் மேற்கொள்ளும் போது குடிநீர் உடன் கொண்டு செல்லுதல் வேண்டும்.
வெளியே செல்லும் போது ஒரு தொப்பி அல்லது ஒரு குடை பயன்படுத்த வேண்டும். மேலும் தலை, கழுத்து, முகம் மற்றும் உடல் உறுப்புகளை ஒரு ஈர துணியால் துடைத்திட வேண்டும். மயக்கம் வருவதாக தோன்றும் போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். வீட்டில் பயன்பாட்டு பானங்களை லஸ்ஸி, எலுமிச்சை சாறு, மோர் முதலியன எடுத்துக் கொள்ள வேண்டும். கால்நடைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகளை நிழலில் வைத்து அவற்றிற்கு தண்ணீர் வழங்க வேண்டும். ஈரமான ஆடைகளை பயன்படுத்தவும் மற்றும் அடிக்கடி குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். வீட்டில் பணிபுரியும் நிறுவனங்களில் மண்பானையில் குடிநீர் வைத்து பயன்படுத்துவது உகந்தது. கருவுற்ற தாய்மார்கள் மற்றும் முதியோர்கள் வெப்ப அலை காலங்களில் உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சமையல் அறைகள் காற்றோட்டம் உள்ளதாக இருக்க வேண்டும்.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை 11.30 மணி முதல் 3.00 மணி வரை திறந்த வெளியில் கல்வி கற்பிப்பதை தவிர்க்குமாறு ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் நண்பகல் 12.00 மணி முதல் 3.00 வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
பொதுமக்கள் கடுமையான வெப்பநிலையில் குறிப்பாக உச்சி வெயிலில் முடிந்தவரையில் வேலைகளை தவிர்க்கவும். உடலில் ஹைட்ரேட்டுகளை தவிர்க்க மது, டீ, காபி மற்றும் கார்பனேட் போன்ற மென்பானங்கள் அருந்துவதை தவிர்க்கவும். அதிக புரதத்தை தரக்கூடிய உணவு மற்றும் நாளான உணவு எடுத்துக் கொள்ள கூடாது. நிறுத்தப்படும் வாகனங்களில் குழந்தைகள் அல்லது செல்லப் பிராணிகளை விட்டு செல்ல வேண்டாம். நண்பகல் வேளையில் குழந்தைகளை வெளியில் செல்ல அனுமதிக்க கூடாது. சமையல் பணிகளை பெரும்பாலும் நண்பகலில் செய்வதை தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;
வெப்பஅலை விபரம் குறித்த செய்திகளை ரேடியோ, தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் ஆகியவற்றை அன்றாடம் கவனித்து அறிந்து கொள்ள வேண்டும். கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட வேண்டும். மக்கள் கூடும் பொது இடங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க தொடர்புடைய, அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாகம் இல்லை என்றால் கூட போதுமான அளவு தண்ணீர் முடிந்த வரை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும். தளர்வான மற்றும் நுண்ணிய பருத்தி ஆடைகள், பாதுகாப்பு கண்ணாடிகள், குடை, தொப்பி, காலணிகள் போன்றவற்றை சூரிய வெப்பத்தில் வெளியே செல்லும் போது பயன்படுத்த வேண்டும். பயணங்கள் மேற்கொள்ளும் போது குடிநீர் உடன் கொண்டு செல்லுதல் வேண்டும்.
வெளியே செல்லும் போது ஒரு தொப்பி அல்லது ஒரு குடை பயன்படுத்த வேண்டும். மேலும் தலை, கழுத்து, முகம் மற்றும் உடல் உறுப்புகளை ஒரு ஈர துணியால் துடைத்திட வேண்டும். மயக்கம் வருவதாக தோன்றும் போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். வீட்டில் பயன்பாட்டு பானங்களை லஸ்ஸி, எலுமிச்சை சாறு, மோர் முதலியன எடுத்துக் கொள்ள வேண்டும். கால்நடைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகளை நிழலில் வைத்து அவற்றிற்கு தண்ணீர் வழங்க வேண்டும். ஈரமான ஆடைகளை பயன்படுத்தவும் மற்றும் அடிக்கடி குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். வீட்டில் பணிபுரியும் நிறுவனங்களில் மண்பானையில் குடிநீர் வைத்து பயன்படுத்துவது உகந்தது. கருவுற்ற தாய்மார்கள் மற்றும் முதியோர்கள் வெப்ப அலை காலங்களில் உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சமையல் அறைகள் காற்றோட்டம் உள்ளதாக இருக்க வேண்டும்.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை 11.30 மணி முதல் 3.00 மணி வரை திறந்த வெளியில் கல்வி கற்பிப்பதை தவிர்க்குமாறு ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் நண்பகல் 12.00 மணி முதல் 3.00 வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
பொதுமக்கள் கடுமையான வெப்பநிலையில் குறிப்பாக உச்சி வெயிலில் முடிந்தவரையில் வேலைகளை தவிர்க்கவும். உடலில் ஹைட்ரேட்டுகளை தவிர்க்க மது, டீ, காபி மற்றும் கார்பனேட் போன்ற மென்பானங்கள் அருந்துவதை தவிர்க்கவும். அதிக புரதத்தை தரக்கூடிய உணவு மற்றும் நாளான உணவு எடுத்துக் கொள்ள கூடாது. நிறுத்தப்படும் வாகனங்களில் குழந்தைகள் அல்லது செல்லப் பிராணிகளை விட்டு செல்ல வேண்டாம். நண்பகல் வேளையில் குழந்தைகளை வெளியில் செல்ல அனுமதிக்க கூடாது. சமையல் பணிகளை பெரும்பாலும் நண்பகலில் செய்வதை தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.