.

Pages

Sunday, April 23, 2017

அதிரையில் பிரியாணி-அஞ்சுகறி-மந்தி-கப்ஸா உணவகம் திறப்பு ( படங்கள் )

அதிராம்பட்டினம், ஏப்-23
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் ஜாஹிர். உணவக மேஸ்திரி. இவர் ஆர்டரின் பேரில் திருமணம் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு பிரியாணி, அஞ்சு கறி, மந்தி, கப்சா உள்ளிட்ட உணவு வகைகளை சுத்தமாகவும், சுவையாகவும் தயார்செய்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில், புதுத்தெரு என்கேஎஸ் சவுண்ட் சர்வீஸ் அருகே புதிதாக 'ஹயாத் ரெஸ்டாரண்ட்' என்ற பெயரில் உணவகத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தொடங்கி உள்ளார். திறப்பு நாளான இன்று அதிரை பிரமுகர்கள் பலர் உணவகத்திற்கு வருகை தந்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து உணவக உரிமையாளர் மேஸ்திரி ஜாஹிர் கூறுகையில்...
அதிரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அரபு உணவு வகைகளாகிய மந்தி, கப்ஸா, அதிரையின் பிரசித்திபெற்ற பிரியாணி, அஞ்சுகறி ஆகிய உணவு வகைகள் தயாரித்து வழங்கும் உணவங்கள் மிகக்குறைவு. இவற்றை போக்கும் வகையில் இந்த உணவகம் திறக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் தேவைகள் குறிப்பாக வீட்டு விசேஷங்களுக்கு தேவையான பிரியாணி, அஞ்சு கறி சோறு, கப்ஸா, மந்தி, ஃப்ரை ரைஸ், புரோட்டா, சப்பாத்தி, இடியாப்பம் உள்ளிட்டவை மொத்தமாகவும், சில்லறையாகவும் தயார் செய்து கொடுக்க உள்ளோம். தினந்தோறும் புரோட்டோ, சப்பாத்தி, இடியப்பம், இட்லி, தோசை, கறி, சிக்கன் உள்ளிட்டவை சுவையாகவும், சுத்தமாகவும் சுடச் சுட தயார் செய்து வழங்க உள்ளோம். டீ, காபி உண்டு. எங்களது உணவகத்தில் தயார் செய்யப்படும் எந்தவொரு உணவிலும் 'அஜினோமோட்டோ' என்ற உணவு சுவையூட்டி சேர்ப்பது இல்லை. அதிரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்கள் எங்கள் உணவகத்திற்கு தொடர்ந்து வருகைதந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.
உணவக தொடர்புக்கு:  
9952132598
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.