அதிரை நியூஸ்: ஏப்-30
துபையில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பல்வேறு மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிலும் ஷேக் ஜாயித் நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து தேக்கத்தை பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஷேக் ஜாயித் ரோட்டிலும் அதனோடு இணையும் துணை சாலைகளிலும் சிக்னல்களால் ஏற்படும் போக்குவரத்து தேக்கத்தை சரிசெய்ய புதிய பல அடுக்கு பைபாஸ் மேம்பாலங்கள் அமைக்க திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
சுமார் 800 மில்லியன் திர்ஹம் செலவில் அமையவுள்ள இந்த பைபாஸ் பல அடுக்கு மேம்பால சாலைகள் ஜூமைராவிலிருந்த துவங்கி அல் கைல் (வடக்கு) பகுதியில் நிறைவடையவுள்ளன. இந்த மேம்பாலங்கள் தற்போது 2 மற்றும் 3 ஆம் இன்டர்சேஞ்ச் இடையில் அமையவுள்ளன.
இதன் முதற்கட்டப் பணிகள் ஏற்கனவே நடந்து வரும் நிலையில் அது 2018 ஆம் ஆண்டு நிறைவுறும் என்றும், 2 மற்றும் 3 ஆம் கட்டப்பணிகள் 2019 ஆம் ஆண்டிற்குள் முழுமையடையும் என துபை போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
துபையில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பல்வேறு மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிலும் ஷேக் ஜாயித் நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து தேக்கத்தை பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஷேக் ஜாயித் ரோட்டிலும் அதனோடு இணையும் துணை சாலைகளிலும் சிக்னல்களால் ஏற்படும் போக்குவரத்து தேக்கத்தை சரிசெய்ய புதிய பல அடுக்கு பைபாஸ் மேம்பாலங்கள் அமைக்க திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
சுமார் 800 மில்லியன் திர்ஹம் செலவில் அமையவுள்ள இந்த பைபாஸ் பல அடுக்கு மேம்பால சாலைகள் ஜூமைராவிலிருந்த துவங்கி அல் கைல் (வடக்கு) பகுதியில் நிறைவடையவுள்ளன. இந்த மேம்பாலங்கள் தற்போது 2 மற்றும் 3 ஆம் இன்டர்சேஞ்ச் இடையில் அமையவுள்ளன.
இதன் முதற்கட்டப் பணிகள் ஏற்கனவே நடந்து வரும் நிலையில் அது 2018 ஆம் ஆண்டு நிறைவுறும் என்றும், 2 மற்றும் 3 ஆம் கட்டப்பணிகள் 2019 ஆம் ஆண்டிற்குள் முழுமையடையும் என துபை போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.