.

Pages

Friday, April 28, 2017

அதிரை பேருந்து நிலையத்தில் கட்டணம் வசூலிக்க ஏலம் - டெண்டர் அறிவிப்பு !

அதிராம்பட்டினம், ஏப்-28
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி சார்பில் 2017 -18 ஆம் ஆண்டிற்கு பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நுழைவு கட்டணம், பேருந்து நிலைய கழிப்பிட கட்டணம், சாலையோர அங்காடி கட்டணம், ஆடு அடிக்கும் தொட்டி கட்டணம் வரும் 01.05.2017 முதல் 31.03.2018 வரை வசூலிக்க உரிமம் வழங்குவது தொடர்பாக எதிர்வரும் மே-3 ந்தேதி புதன்கிழமை காலை 11 மணியளவில் மறுஏலம்-மறுடெண்டர் விட அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதில் பங்குபெற ஆர்வம் உள்ளவர்கள் பேரூராட்சி நிர்வாகம் நிர்ணயித்துள்ள கீழ்காணும் டேவணித் தொகையை வரும் மே. 3 ந்தேதி காலை 10 மணிக்குள் செலுத்தி ஏலத்தில் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சாலையோர அங்காடி கட்டணம் வசூலிக்க ( டேவணித் தொகை ரூ. 250,000  )
பேருந்துகள் நுழைவு கட்டணம் வசூலிக்க ( டேவணித் தொகை ரூ.100,000 )
பேருந்து நிலைய கழிப்பிட கட்டணம் ( டேவணித் தொகை ரூ.100,000  )
ஆடு அடிக்கும் தொட்டி கட்டணம் ( டேவணித் தொகை ரூ.20,000  )

மேலதிக தகவல் பெற மற்றும் தொடர்புக்கு அதிரை பேரூராட்சி அலுவலக அறிவிப்பு பலகையைக் காணவும்.

1 comment:

  1. வழக்கமா ஏலத்தை எடுப்போர் தான் இப்போது எடுப்பார் என தெரிகிறது., நம்மக்கள் இதன் மீது விழிப்புணர்வு கிடையாது; முயற்சி பண்ணிபாருக்க அதன் அருமை தெரியலாம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.