.

Pages

Friday, April 21, 2017

பட்டுக்கோட்டையில் அரசு மருத்துவர்கள் போராட்டம் ( படங்கள் )

பட்டுக்கோட்டை, ஏப்-21
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு தஞ்சை மாவட்டத் தலைவர் அ. அன்பழகன் தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பொன். அறிவானந்தம், மாவட்ட இணைச் செயலர் டாக்டர் லோகநாதன் மற்றும் அரசு மருத்துவமனையிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பணிபுரியும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

தமிழக அரசு மருத்துவர்களுக்குப் பட்ட மேற்படிப்பு இடங்களில் முன்பு இருந்தது போலவே 50 சதவீத இடங்களை ஒதுக்கித் தகுந்த அவசர சட்டத்தை இயற்றி தமிழக அரசு மருத்துவர்களின் நலன் காக்க வேண்டும்.

தமிழக அரசு மருத்துவர்களுக்குப் பட்ட மேற்படிப்பு இடங்களில் ஒதுக்கீடு கிடையாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு மேல் முறையீடு செய்து மருத்துவர்களின் உரிமைகளைக் காக்க வேண்டும்.

தமிழக அரசு மருத்துவர்களுக்குப் பட்ட மேற்படிப்புகளில் முன்பு இருந்தது போல ஒதுக்கீடு வழங்க இந்திய மருத்துவக் குழு விதிகளில் மாற்றம் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடர வேண்டும். ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.