.

Pages

Sunday, April 23, 2017

துபாயில் ஸ்மார்ட் பார்க்கிங் வசதி அதிகரிப்பு !

அதிரை நியூஸ்: ஏப்-23
துபையில் கார் வாங்குவது எளிது ஆனால் அதை நிறுத்த பார்க்கிங் வசதியை கண்டுபிடிப்பது தான் மிக மிகச்சிரமம். இந்த நிலையை போக்குவதற்காக பல்வேறு மாற்று யோசணைகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றாலும் பிரச்சனைகள் அதிகரிக்கின்றதே தவிர குறைந்தபாடில்லை. துபை போக்குவரத்து துறையின் சார்பாக மட்டும் 112,000 பார்க்கிங் ஸ்லாட்டுகள் 69 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பாராமரிக்கப்பட்டு வருகின்றன.

துபை போக்குவரத்துத் துறை சார்பாக அடுக்குமாடி பார்க்கிங், சாலையோர பார்க்கிங், தரைதள பார்க்கிங், தனியார் துறை பார்க்கிங் என பல வசதிகள் இருப்பது போல் கடந்த 6 வருடங்களாக துபை இன்டர்நேஷனல் பைனான்சியல் சென்டர் பகுதியில் உலகிலேயே மிகப்பெரிய தானியங்கி பார்க்கிங் ஒன்று இருந்தாலும் இது மக்களால் பெரியளவில் வரவேற்கப்படவில்லை என்பது சோகமே.

எனவே, பொதுமக்கள் தங்களுடைய சொந்த வாகனத்தை பயன்படுத்துவதை விடுத்து பொது போக்குவரத்துக்களான பஸ், மெட்ரோ, டிராம், டேக்ஸிக்களை பயன்படுத்த முன்வர வேண்டும் என்றும், உபேர், கறீம் போன்ற தனியார் டேக்ஸிக்களை ஷேரிங் அடிப்படையில் பகிர்ந்து கொண்டு பயணிக்க முன்வர வேண்டும் என்றும், சொந்த வாகனங்களை பயன்படுத்தாமல் பொது போக்குவரத்துக்களை தொடர்ந்து பயன்படுத்தும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பது போன்ற பல யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்நிலையில், அபுதாபியில் விமான நிலையம் உள்ளிட்ட 2 இடங்களில் ஏற்கனவே செயல்படுவது போன்று ரோபோ தொழிற்நுட்பத்தில் இயக்கப்படும் ஸ்மார்ட் பார்க்கிங்குகளை தேரா, பர்துபை, துபை மரீனா, ஜூமைரா லேக்ஸ் டவர் போன்ற பகுதிகளில் அமைக்கவும், இத்தகைய பார்க்கிங்குகள் அமைவதால் பார்க்கிங் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுவதுடன் கூடுதலாக வாகன திருட்டு, வாகனங்களை உடைத்து திருடுவது மற்றும் வன்முறையால் பாதிக்கப்படுவது போன்ற நிகழ்வுகள் தடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.