தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கரையூர் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வங்கி படிவங்கள் பூர்த்தி செய்தல் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
போட்டியை பள்ளித் தலைமை ஆசிரியை மணிமேகலா நடத்தினார்.
போட்டியில் 6, 7, 8 ஆகிய வகுப்பு மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக பாரத ஸ்டேட் வங்கி அதிராம்பட்டினம் கிளை மேலாளர் ஹமீதுகான் கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்து, போட்டியில் வெற்றி பெற்ற 10 மாணவ, மாணவிகளுக்கு எழுதுகோல் பரிசாக வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். மேலும் பாரத ஸ்டேட் வங்கி அதிராம்பட்டினம் கிளை சார்பில் பள்ளிக்கூட வகுப்பறைகளுக்கு 4 மின்விசிறிகள் ( சீலிங் பேன் ) தலைமை ஆசிரியையிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வங்கி வர்த்தகத் தொடர்பாளர் ஷேக் அப்துல்லா, பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
ஆசிரியர்: கர்ணன் பலமாதமாக தூங்கினான் இது எந்தக்காலம்? மாணவன் : கொசு இல்லாத காலம் சார்.
ReplyDelete