.

Pages

Friday, April 21, 2017

கரையூர்தெரு அரசுப் பள்ளியில் வங்கி படிவங்கள் பூர்த்தி செய்தல் போட்டி !

அதிராம்பட்டினம், ஏப்-21
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கரையூர் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வங்கி படிவங்கள் பூர்த்தி செய்தல் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

போட்டியை பள்ளித் தலைமை ஆசிரியை மணிமேகலா நடத்தினார்.
போட்டியில் 6, 7, 8 ஆகிய வகுப்பு மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக பாரத ஸ்டேட் வங்கி அதிராம்பட்டினம் கிளை மேலாளர் ஹமீதுகான் கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்து, போட்டியில் வெற்றி பெற்ற 10 மாணவ, மாணவிகளுக்கு எழுதுகோல் பரிசாக வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். மேலும் பாரத ஸ்டேட் வங்கி அதிராம்பட்டினம் கிளை சார்பில் பள்ளிக்கூட வகுப்பறைகளுக்கு 4 மின்விசிறிகள் ( சீலிங் பேன் ) தலைமை ஆசிரியையிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வங்கி வர்த்தகத் தொடர்பாளர் ஷேக் அப்துல்லா, பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1 comment:

  1. ஆசிரியர்: கர்ணன் பலமாதமாக தூங்கினான் இது எந்தக்காலம்? மாணவன் : கொசு இல்லாத காலம் சார்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.