.

Pages

Saturday, April 29, 2017

அதிரையில் மஜக 2 ஆம் ஆண்டு துவக்க விழா, அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம் !

அதிராம்பட்டினம், ஏப்-29
மனிதநேய ஜனநாயக் கட்சியின் 2 ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, அக்கட்சியின் அதிரை பேரூர் கிளை சார்பில், அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம் அதிரை பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் எம். அகமது கபீர் தலைமை வகித்தார். அதிரை பேரூர் செயலாளர் எம்.ஐ முஹம்மது செல்லராஜா வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அக்கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரஷீது சிறப்புரை ஆற்றினார். மேலும் மாநில துணை பொதுச்செயலாளர் மதுக்கூர் கே. ராவூத்தர்ஷா, மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மாநில இளைஞர் அணி செயலாளர் ஜே. சமீம் அகமது, கொள்கை பரப்புச் செயலாளர் மன்னை செல்லச்சாமி, அதிரை ஜியாவூதீன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். கூட்டத்தை மஜக குவைத் மண்டல ஊடகச் செயலாளர் அப்துல் சமது வழிநடத்தி சென்றார்.

கூட்டத்தில் அதிராம்பட்டினம் பகுதிகளில் இயங்கி வரும் மதுக்கடைகளை மூட வேண்டும், அதிரையில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும், அதிரையில் 108 ஆம்புலன்ஸ் வசதி, அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களுடன் 24 மணி நேர சேவை, அதிரை பகுதிகளின் பழுதடைந்த சாலைகளை சீரமைத்தல், திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டப்பணிகளை விரைந்து முடித்தல் உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்ட முடிவில் அக்கட்சியின் அதிரை பேரூர் பொருளாளர் எச். சாகுல் ஹமீது நன்றி கூறினார். கூட்டத்தில் அக்கட்சியை சேர்ந்த எஸ். அப்துல் ஜப்பார், எஸ். அப்துல் காதர், ஹனி ஷேக், எஸ். முகைதீன், ஜே. ஜுபைர், ஜே. முகமது யூனுஸ், எஸ். தக்பீர் நைனா முகமது, குதுபுதீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.