.

Pages

Monday, April 17, 2017

அதிரையில் முஸ்லீம் லீக் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் ( படங்கள் )

அதிராம்பட்டினம், ஏப்-17
கேரளா மாநிலம், மலப்புரம் தொகுதி எம்.பி-யாக இருந்த முன்னாள் அமைச்சர் இ.அகமது திடீரென உடல்நலக்குறைவால் காலமானதை அடுத்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த ஏப்-12 ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதையடுத்து இன்று திங்கட்கிழமை வாக்குப் பதிவு எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் இத்தொகுதியில் போட்டியிட்ட
அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பி.கே. குஞ்ஞாலிக்குட்டி 171,038 வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றார்.

இதையடுத்து, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகள், தொழுகையாளிகள், வர்த்தகர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு இனிப்பு வழங்கி உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்நிகழ்ச்சியில், அக்கட்சியின் அதிரை பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன் தலைமையில், மாவட்ட இளைஞர் அணி பொறுப்பாளர் சாகுல்ஹமீது, மாவட்ட பிரதிநிதி ஜமால் முஹம்மது, துணைச்செயலர் முஹம்மது அபூபக்கர் உள்ளிட்ட முஸ்லீம் லீக் கட்சியினர் கலந்துகொண்டனர். மேலும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக கட்சி அலுவலகத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.