.

Pages

Saturday, April 29, 2017

அமீரக பாலைவன மண்ணில் நெல் பயிரிட்டு அறுவடை செய்த மாணவர்கள் ( படங்கள் )

அதிரை நியூஸ்: ஏப்-29
கேரளாவைச் சேர்ந்த சுதீஷ் குருவாயூர் என்கிற எலக்ட்ரிக்கல் எஞ்சினியராக இருந்து தற்போது விவசாய மேற்பார்வையாளராக உவப்புடன் அமீரகத்தில் பணியாற்றி வருபவர்,இவர் அமீரகத்தில் பல்வேறு விவசாய சார்ந்த சாதனைகளை நிகழ்த்தியதற்காக 5 உலக சாதனைகளை தன்னகத்தே வைத்திருப்பவர். தன்னுடைய வீட்டின் கொல்லைப்புற பகுதியை சுமார் 4 மாதங்கள் விவசாயம் செய்ய ஏற்றவகையில் சீர்படுத்தினார். பின்பு அதில் இந்திய பள்ளி மாணவர்களை கொண்;டு நெல்லை விதைத்து வளர்த்து வந்தார்.

5 மாத வளர்ச்சிக்குப் பின் அறுவடைக்கு ஏற்ற வகையில் நன்கு வளர்ந்திருந்த நெல்லை 3 இந்தியப் பள்ளிகளின் மாணவ, மாணவிகளை கொண்டே நேற்று அறுவடை செய்ய வைத்து விவசாயத்தையும், விவசாயிகளின் அருமையையும் செயல்முறை பயிற்சி ரீதியாக உணரச் செய்தார். நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற அறுவடை நிகழ்ச்சியை ஒரு திருவிழாவைப் போல் ஏற்பாடு செய்தும் அதில் விவசாயிகளின் ஆடையை உடுத்தியும் நாட்டுப்புற பின்னனிப் பாடல்களுடன் 'களத்து மேடு' நிகழ்வுகளை கண்முன்னெ கொண்டு வந்தார். சுதீஷ் அவர்களின் சீரிய முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.