.

Pages

Saturday, April 29, 2017

சவூதி அரேபியாவில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திய எண்ணெய் வளம் (படங்கள்)

அதிரை நியூஸ்: ஏப்-29
1938 ஆம் ஆண்டு பாலைவன நாடான சவுதி அரேபியாவில் எண்ணெய்வளம் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து சவுதியின் பொருளாதாரம் மட்டுமல்ல வெளிநாட்டினரின் வாழ்விலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது.

புதிதாக கச்சா எண்ணெய் விற்பனை மூலம் பணம் கொட்டத் துவங்கியதால் அதுவரை உடல் உழைப்புக்கள் மூலம் அடிமட்ட வேலைகள் வரை செய்து வந்த அரபிகள் தங்களின் பாரம்பரிய வேலைகளை உதறிவிட்டு அரசு வேலைகளுக்கு தாவியதால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிறைக்கவும், புதிய கட்டுமானங்களுக்கு அது தொடர்பான தொடர் பராமரிப்பு பணிகளுக்காகவும் தேவைப்பட்ட பொறியாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் பிற வெளிநாட்டினரை நம்பும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

இதில் அமெரிக்கா என்ற நாடு மட்டும் சவுதியை சுரண்டி கொளுத்தது, இன்றும் கண்முன்னே ஏமாற்றி வருவதும் தனி விஷயம். (இதைப் பற்றி ஒரளவு அறிந்து கொள்ள ஜான் பெர்கின்ஸ் என்ற அமெரிக்கர் எழுதிய 'ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்' என்ற புத்தகத்தை வாசிக்கவும்)

ஒரு பக்கம் சவுதியர்கள் மற்றும் வெளிநாட்டினர் என இருதரப்பாருக்கும் பொருளாதார ரீதியில் பயனளித்தாலும் இடையில் பெயரளவு சவுதி முதலாளிகளின் பெயரில் வெளிநாட்டினர் சொந்த வியாபாரம் செய்தும், சட்ட விரோதமாகவும் தங்களுடைய நாடுகளுக்கு பணத்தை அனுப்புவது, போலி படிப்புச் சான்றிதழ்களுடன் சவுதிக்குள் ஊடுருவது, வேலைக்கு எடுத்த அரபியிடம் அல்லது நிறுவனத்தில் வேலை செய்யாமல் ஓடுவது போன்ற ஒழுங்கீனங்களும் சவுதியை பாதிப்பதாக சவுதி மீடியாக்கள் குறைபட்டுக் கொள்கின்றன.

எது எப்படியோ, படிப்பறிவில்லாத வெளிநாட்டினரும் கைநிறைய சம்பாதிக்க இயலும் என உலகமே உணரும் வகையில் நிரூபித்ததில் சவூதி பிற வளைகுடா அரபு நாடுகளுக்கும் இன்றும் ஒரு சிறந்த முன்மாதிரியே.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான் 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.